இனவழிப்பில் பாக்கின் போக்கு

இனவழிப்பில் பாக்கின் போக்கு

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது
பாக்கு, வெத்திலை வைத்து கொடுத்து வரவேற்பது தமிழினத்தின் பண்டைய பண்பாடும், காலாசாரப்படிமம் ஆகும். இது இலட்சுமி கடாச்சமானது என்றும், தெய்வீகமானது என்றும் கருதப்பட்டது. வாக்குச் சொல்பவர்கள் கூட பாக்கு உருட்டியும், வெத்திலை நாடி பார்த்தும் குறி சொன்னார்கள். இப்படி இருந்த பாக்கு இன்று போக்குமாறி, வாக்குமாறி இனத்தையே பலவீனப்படுத்தும் தாக்கு பொருளாக மாறியுள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதை அரசோ, குற்றத்தடுப்புப்பிரிவோ, அரசவதிகாரிகளோ இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சமூக ஆவலர்கள் இது குறித்து விசனப்பட்டு, புகார் செய்தாலும் இதைக் அரசு கண்டு கொள்ளாதிருப்பதும், தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பதும், பெற்றோர், சமூக ஆவலர்கள்,காலசாரக்காவலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பல வேறுபட்ட வகுப்பினர்கள் விசனத்துக்குள்ளாகி உள்ளார்கள்.
அண்மையில் இந்த மாவாப்பாக்கை மல்லாகத்திலுள்ள உயர்தரவகுப்பில் பயிலும் இருமாணவர்கள் பாவித்தமை நேரடியாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மாணவசமூகத்தினுள் இளைஞர், யுவதிகள் மத்தியில் இப்படிப்பட்ட போதைப்பாக்கு வகைகளைப் பாவிக்கும் நிலை சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் வருகிறது. இது எப்படி வருகிறது? இதன்பின்னணி என்ன? எதிர்கால இலக்கு என்ன? என்பது பற்றி ஆராயவுள்ளோம்.
பாக்கு
பாக்கை சிங்கப்பூர், சில மத்தியகிழக்கு நாடுகள் போதைப் பொருளாகவே பார்க்கின்றனர். விமானநிலையங்களில் பாக்குடன் பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாகவே போதைப் பொருள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இது தமிழ், சிங்கள மக்களிடையோ சர்வசாதராணமாக பாவிக்கும் பாவனைப் பொருளாகவே அன்று இருந்தது. வல்லுவம் என்ற சிறுபையில் பாக்கு வெத்திலை சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு திரிந்தார்கள். அதில் கொட்டைப்பாக்கு நாறல்பாக்கு எனபலவகையில் பதப்படுத்தி சீவலாக்கிப பயன்படுத்துவார்கள். பல்லும்போனவர்களும் பாக்கை சிறு உரலில் இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்துவார்கள். இன்று சூவீங்கள் எனும் இறப்பறை சப்புவதுபோல் அன்று பாக்கு வெத்திலை என்பது பொழுதுபோக்காகப் பொருளாக சமூகவிணைப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இது தேனீர்இ காப்பி போன்ற சமூகதொடர்பு உண்டிகள் போல் இதுவும் பயன்படுத்தப்பட்டது. பழக்கமில்லாதவர்கள் இதை உண்ணும் போது தலைசுற்றும். இதில் சிறு போதைத்தன்மை இருக்கிறது என்பதற்கு இந்த உதாரணம் போதுமானது.
போதைப்பொருட்கள்
போதை என்று பார்க்கும் போது தேனீர், காப்பி போன்றவைகளும் போதைப் பொருக்களே. போதையின் அளவை, தாக்கு வீரியத்தை வைத்தே போதைவஸ்து எது என்றும் மென்போதைப் பொருள் எது என்பதும் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதிறன் குறைந்த தங்குதன்மையற்ற காப்பி ,தேனீர் போன்றன ஊக்கம் தரும்   சமூகப்பாவனைப் பொருட்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதை ஏற்றும், தங்கிவாழப்ப்பண்ணும் பொருக்களான கஞ்சா ,அபின் ,கரோயின், கொக்கோயின் போன்றன தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களாகக் கொள்ளப்பட்டன. இப்போதைப் பொருட்கள் மனிதனை, மனிதமூளையை தாக்கு தங்கிவாழச் செய்வதால் இதை தடைசெய்யப்பட்டன.
வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து எம்மை தம்மில் தங்கிவாழப்பண்ணினான். இதில் ஒருவடிவமே தேயிலை, காப்பி அறிமுகமாக இருந்தது. எமக்கு அதைப் பழக்கி, எமக்கே விற்றுப் பணம் சம்பாதித்தான். இதனால் பாக்கின் பயன்பாடும் குறையத்தொடங்கியது. இதை புதுமுறையில் உயிர்பிக்க பீடா என்று இதேபாக்கை சீனி, வாசனைப் பொருட்களுடன் கலந்து விற்கத் தொடங்கினார்கள். இது இளைஞர் யுவதிகள் மத்தியில் ஓரளவு வளர்ந்தாலும் அங்கிகரிக்கப்பட்டதும் சமூகவந்தஸ்துப் பெற்ற கோப்பி தேனீருடன் போட்டி போட முடியவில்லை. இன்று கோப்பி தேனீருக்கென்றே பல கடைகள் உருவாயிருப்பதை அனைவரும் அறிவர்.
போதைப்வஸ்துக்கள் மனிதனை அதில் முழுமைகாகத் தங்கி வாழப்பண்ணுகிறது என்பதுடன் அழித்தும் விடுகிறது. இதனால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் தண்டிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படடுத்தப்பட்டது. வன்போதைப் பொருட்கள் பாவனை திறனற்ற சமூகத்தை உருவாக்க வழிகோலும் என்பது திண்ணம். உலகிலேயே தடைசெய்யப்பட்ட வன்போதைப் பொருட்கள் சமூகமயப்படுத்துவது அடிப்படையில் தமிழினத்தை அழிக்கும் ஒருசெயலாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரினத்தின் அத்திவாரத்தை ஆணிவேரை பிடுங்குவதாக அமையும். இளையவர்களே ஒரினத்தின் எதிர்காலம். இவர்கள் போதையில் தங்கி வாழ்ந்தால் சமூகம் கட்டுப்பாடு இழந்து  வன்செயல்களைத் தொடர்ந்து அறிவிலிகளாக, வல்லுறவாளர்களாக வாழத்தொடங்குவார்கள்.
இப்பாக்கப் போதைப் பொருளை யார்விற்பனை செய்கிறார்கள்? எப்படி நாட்டுக்குள் நுளைகிறது? என்ற கேள்விகளுக்கு விடை அரச அனுமதியுடனே இவை புளக்கத்துக்கு வருகிறது என்பதாகும். வன்போதைப் பொருக்களை பாக்கு என்ற சமூகவந்தஸ்துப் பெற்ற சப்புபொருளை போதைப் பொருட்களுடன் கலந்து இராணுவத்தினூடு இலவசமாக முக்கியமாக இளைஞர் யுவதிகளைக் குறிவைத்தே அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகிறது. சுயமாகச் சிந்திக்கும் விவேகமுள்ள இளைஞர்களே நாட்டின் நாடி நரம்பாகவும் இனத்தின் காப்பரண்களாகவும் அமைகிறார்கள். இக்காப்பரண்களைச் சிதைப்பதன் ஊடாக ஒரு இனத்தையே அழித்து  புரட்சி, போராட்டம் என்ற சொற்களையே அர்த்தமற்றதாக்கி விடலாம் என்பதில் அரசு குறியாக உள்ளது. இப்போதைவஸ்துக்களால் பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், சுயசிந்தனை அழிப்பு, இனவேற்றுமை உடைப்பு, தேசிய அறுப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வன்போதைப் பொருட்கள் இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கப் பெறும் போது அதன் பாவனை வீதம் அதிகரிப்பதற்கும் வன்செயல்கள் உயர்வதற்கும் ஏதுவாக அமைகியும்.
அரசின் சாதகமான முயற்சியோ, உதவியோ கிடைக்காத பட்சத்தில் இதைத்தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நாட்டின் சட்டம் என்பது கோட்டில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலாசாரச்சட்டம் என்பது மனங்களில் உறுதியாக்கப்படுவது. இதனால் இப்போதை வஸ்துக்கள் பற்றிய விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும். இதன் தீமைகளை எடுத்துரைப்பதும், இப்பானையாளர்களை விற்பனையாளர்களை சமூகவிரோதியாக பார்ப்பதற்கு தமிழ்சமூகத்தை உந்துவதும் இப்படியான வன்போதைப் பொருள் பாவனையை முளையிலேயே கிள்ளுவதற்கான யோசனைகளாகும். சட்டத்தால் முடியாதவற்றை சில காலாசாரங்கள் திறமையாகவே செய்யும்.
ஒருவினத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினத்தின் மொழி,கலை, கலாசாரம், ஆழ்நிலம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை அழிப்பதனூடாகவே மிக இலகுவாக இனவழிப்பை நிறைவேற்றலாம். இதில் இளையவர்களை சுயசிந்தனையற்றவர்களாக உருவாக்கும் போது ஒரினமே தனக்குத் தானே தீயிட்டுக் கொள்கிறது. இதில் இந்த மாவா பாக்கு பெரும்பங்கை ஆற்றுகிறது.  காலாசாரம், கல்வி, பொருளாதாரம் என்பற்றை ஒரேநேரத்தில் குறிவைத்துத் தாக்குகிறது. இனவிடுதலை, தேசியம், போராட்டம், விடுதலை பற்றி வாயறக்கத்தும் பெருமக்களே! இப்போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதும் போராட்டமே என்பதை அறியுங்கள். ஆயுதம் எடுத்துப் போராடுவதும், கூட்டங்கள் போடுவதும், மேடையில் பேசுவதும், ஊர்வலங்கள் நடத்துவது மட்டல்ல போராட்டம். ஒரினத்தை அதன் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் போராடுவதும் மனிதநேயத்துடன் கூடி இரட்டிப்பான இனவிடுதலைப் போராட்டம் என்பதை உணர்க. தேசியம் சுயநிர்ணயம் பேசுபவர்கள் அடிப்படையில் சுயமாகச் சிந்திக்க முடியாத மக்களிடம் அது குறித்து எப்படிப் பேசுவீர்கள். சுயமாகச் சிந்திக்கும் மனிதனால் மட்டுமே தன்னினம், மக்கள், தன்னிலம், தேசம் என்று சிந்திக்க முடியும். சுயநினைவுடன் ஆரோக்கியமாக சிந்திக்கும் மனிதனாலும் மக்களாலுமே ஒரு இனவிடுதலையை வென்றேடுக்க முடியும். புலத்தில் இருந்து சுயநலனுக்காக போராட்டம், இனம், சுயநிர்ணயம் என்று பேசுபவர்கள் அம்மண்ணின் மக்களின் நிலையை சிந்திக்கவே மாட்டார்கள். ஏதாவது சாட்டுகச் சொல்லிப் பணம் பறிப்பதே குறியாக இருக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியே சுயநலன்களின் விஸ்வரூபமே என்பதை அறிக.
எம்மினத்தை ஆரோக்கியமாகவும், கல்வி, கேள்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடல் உளநலன்களுடன் வாழவைத்தாலே போதும் விடுதலை, சுதந்திரம் என்பது தானாகவே வந்துசேரும். தமிழ்தேசியம் தானாகவே காப்பாற்றப்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குத்தான். சுயம்பன் கொடியும் பணம் சுருட்டலே நடப்பு. எம்மினம் சிந்திக்குமா? இதற்கான முதலடியை எடுத்து வைக்குமா? கால் முழுமையாக முறிவதற்குமுன் பத்தைக் கட்டிவிடுங்கள். சமூகம் தானாகவே நடக்கும்.
நம்பிக்கையுடன் நோர்வே நக்கீரா
Posted in கட்டுரை | 2 பின்னூட்டங்கள்

பரம்பரையே வேண்டாம் (கவிதை 15.05.2015)

 பரம்பரையே வேண்டாம்(கவிதை 15.05.2015)
kill k
(புங்கிடுதீவைச்சேர்ந்து உயர்கல்வி கற்கும் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துப்பட்ட பின் மூவரால் ( 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40) பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34) பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர்). கொலை செய்யப்பட்டார். இதைத் தழுவி எழுதிய கவிதை)
காவலாய் நிற்கவேண்டிய கடவுள்களே!
காமக்கோலமாய் நிற்பதேன் கயமைகளே!
உங்களைப் பூசித்தவளும்
கண்காணாமலேயே நேசித்துவளும்
ஒருபெண்தான்
அவர்கள் என்றும் பொன்தான்
பொன்னென்பதாலா
தீயிலிட்டு பொசுக்கி நகையாக்க
நகையாய் நகைக்கிறீர்கள்?
நெஞ்சில் வஞ்சம்கொள் நஞ்சர்களே!
பொந்துக்குள் யந்துக்கள் தேடி
உணவு நாடி
ஊம்பும் நல்லபாம்பு
காதலில் பிறக்காத கயமைகளே நீவீர்
மனிதவடிவில் வாழும் நச்சுப்பாம்பு
பொந்துகளே பொறியானால்….?
பொறுக்கிகளே
விந்து உந்தும் குறியில் வெறிபோகும்.
வாழ்வியல் நெறிமாறும்.
வந்தவிடம் தேடி
வதைகொள்ளத் திரியும் வக்கிரகங்களே!
வதைபடுவது வனிதையரின் உடல்மட்டுமல்ல
உங்களை நேசித்த உள்ளமும் தான்.
கொன்று பின் தின்னும் விலங்கு
இது மிருகதர்மம் எனவிளங்கு
தின்ற பின் கொல்லும் குரங்குகளே
மனிதநேயமற்ற விலங்குகளே
கேடுகெட்ட கொடும் கறுமங்களே
விந்து சிந்தும் கொடிய யந்துசாக
விதைகளைக் சிதைத்து விடுங்கள்
முடிந்தால் முழுமையாய் எடுத்து விடுங்கள்
அரக்கர்கள் மேல் இரக்கம் வேண்டாம்
அரக்கபரம்பரையே இருக்க வேண்டாம்
மரபணுவூடு தொடராதிருக்க
அடியோடு அரிந்துவிடு இதன்பின்
புனிதமாகும் பூமி புரிந்துவிடு
வெகிழ்ச்சியுடனும் வேதனையுடனும்
நோர்வே நக்கீரா 15.05.2015
Posted in கட்டுரை | 3 பின்னூட்டங்கள்

மரணதண்டனை சாதித்தது….?

மரணதண்டனை சாதித்தது….?                       Norway Nackeera 30.04.2015
மன்னர் ஆட்சியில் இருந்து இன்றைய மக்கள் ஆட்சிவரை குற்றம் கண்டு பிடிப்பதும், குற்றங்களுக்குத் தண்டனை வகுப்பதும், நிறைவேற்றுவதும், வளமையாக இருந்து வருகிறது. எது குற்றம் எது குற்றம் இல்லை என்பதை வகுப்பது யார்? தண்டனை வகுப்பாளர்கள் குற்றம் செய்தாதவர்களாக இருந்தார்களா? இத்தண்டனைகளால் குற்றங்கள் குறைக்கப்பட்டனவா? தண்டனைகள் வேண்டாம் என்றால் மாற்றுவழி என்ன? நீதிமன்றங்கள் எதற்கு? குற்றங்களே சட்டமாக்கப்பட்டால் குற்றங்களே நடக்காது இருக்குமல்லவா? சமூகத்தில் தண்டனைகளின் பங்கு என்ன? இது நல்லதா கெட்டதா? ஆய்வு கொள்கிறது இப்படைப்பு
மயூரன் சுகுமாரன் இலங்கைத் தமிழ்வம்சாவளி சேர்ந்த லண்டனில் பிறந்த ஆஸ்திரேலியக்குடிமகனாவார். இவர் 17.4.2005ல் தனது 24ஆவது பிறந்தநாளன்று அன்ரு என்ற இன்னுமொரு ஆஸ்த்திரேலிய குடிமகனுடன் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். 17.02.2006ல் இந்தோனேசிய நீதிமன்றத்தால் மரணதண்டனை தீர்ப்பானது. இதை எதிர்த்து மேன்முறையீடு செய்தபோதும் 2011ல் மரணதண்டனை தான் தீர்வு என்பது உறுதியானபின் 29.04.2015ல் அதாவது அவரின் 34ஆவது பிறந்துநாளின் பின் 11நாட்களுக்குப்பின் மரணதண்டனை நிறைவேற்றப்பட் டது. இவர் பிடிபடும்போது அலட்சியமாக இருந்த எம்சமூகம், அனைத்துலகம் மரணதண்டனை எனத்தீர்ப்பு அளிக்கப்பட்டபோது கூட வாழாதிருந்தது. மரணதண்டனை நிறைவேற்றும் காலம் நெருங்கியதும் தன் பார்வையின் கோணத்தை மாற்றிக் கொண்டது. இரக்கம், காருணியம், அன்பு, பாசம், நீதி, நேர்மை என்ற உணர்வூற்றுக்கள் பீறிடத் தொடங்கின. மரணதண்டனை என்ற செயற்காட்டின் பின்னால் ஏதோ ஒருதாங்கமுடியாத தாக்கு சக்தி உள்ளது என்பது புலனாகிறது. இந்த தாக்குசக்தியை வைத்தே குற்றங்களைத் குறைந்துவிடலாம் என்று சட்டம் நம்புகிறதா?
மனிதசமூகத்தையே கெடுக்கும் போதைப்பொருட்களை மயூரன் கடத்திப் பிடிபட்டபோதும், மரணதண்டனை எனத்தீர்ப்பழித்தபோதும் தண்டனை சரியானது என கூறியவர்கள் மரணதண்டனையை நிறைவேற்றும் நாட்நெருங்கியபோது தம்கருத்துக்களை கருணையாக மாற்றியவர்கள் பலர் உண்டு. இது எமக்குக் காட்டும் சமிஞ்ஞை என்னவெனில் தண்டனை தேவை என்பதில் எந்தச் சந்தேகமும் அற்ற
சமூகம் மரணதட்டனையை ஏற்ற மறுக்கிறது. மரணம் தண்டிக்கப்படுபவர்களை அச்சுறுத்தாத போதிலும் பார்ப்பவர்கள், கேட்பவர்களை அச்சுறுத்துகிறது. இதன் விளைவே மரணதண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதற்குக் காரணமாக உள்ளது.
இனி மரணதண்டனை பெற்ற அனைவரும் குற்றவாளிகளா என்ற கேள்விக்கு ஆம் என்று யாராலும் அறிதியிட்டுச் கூற இயலாது. கொலை செய்வது குற்றம் என்று எந்தச்சட்டம் சொல்கிறதே அதே சட்டம்தான் கொலை செய்ய மரணதண்டனையை ஏவுகிறது. இது எப்படி நியாயமாக முடியும்? நானும் நீங்களும் கொலைசெய்தால் குற்றம் இராணுவம் செய்யலாம் அது சட்டம். பக்கத்துவீட்டானின் நிலத்தை நீங்கள் அபகரித்தல் குற்றம் ஊராச்சியாளரோ அரசே அபகரிக்கலாம் அது சட்டம். ஆக சட்டம் சமநிலையற்றே இருக்கிறது. இதற்குள் மதங்கள் வேறு.
இஸ்லாத்தைத் தவிர எல்லாமே இறைவன் என்று காணும் மதங்கள் தண்டனையை இறைவனிடம் விட்டு விட்டுகிறார்கள். ஆனால் எல்லாமே கடவுள் அல்லாவே எல்லாம் எனும் இஸ்லாம் மட்டும் தண்டனை கொடுப்பதிலும், தண்டிப்பதிலும் அகோரமாக இருக்கிறது. ஒரு சிருஸ்டியையே செய்ய முடியாத அற்ப பதரான மனிதன் கடவுளின் சிருஸ்டியை அழிப்பதற்கு எத்தகைய தகுதி உடையவன்? கடவுளை எவனுமே இதுவரை கண்டது கிடையாது. காணத கடவுளைக் கண்டதாக, கடவுள் சொன்னதாக கடவுளின் பெயரால் பொய்கூறி கொலைகள், பலிகள் நடக்கின்றன. இது பொய்மையின் போலிப்பித்தலாட்டமே. ஆக மரணதண்டனை என்பது மன்னிக்கப்பட முடியாத கொலையாகும்.
இன்று நடைமுறைப்படியும், சட்டப்படியும் பிழையான அனைத்தும் நாளை, எதிர்காலத்தில் சரியென அமைகிறது. இன்று சட்டவிரோதம் எனக்பட்டது நாளை சட்டமாகும். ஆகா சமனிலையற்ற உறுதியற்ற சட்டமானது அறுதியும் உறுதியுமாக உயிரை எப்பது எப்படி நியாயமாகும். பூமி உருண்டை என்ற விஞ்ஞானியை தூக்கிலிட்டார்கள். இறுதியில் பூமி உருண்டை என்பதே முடிவான ஒன்றாகியுள்ளது. தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிக்கும், அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள்தானே? அவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படாது இருந்திருந்தால் சிறையில் இருந்தாவது தமது கூற்று சரி என நிரூபித்திருப்பார்கள். சிலவேளை இன்னும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகிற்குத் தந்திருப்பார்கள். நாம் இன்னும் எத்தனையோ படிகள் முன்நோக்கி இருந்திருப்போம். சமூகமும் சட்டமும் இதற்கான சந்தர்பத்தை வழங்கியதா? சரி தண்டித்தவர்களை யார் தண்டித்தார்கள்? நீதி என்ற பெயரில் எத்தனை அநீதிகள் நடந்தேறியுள்ளன? சட்டமோ தண்டனைகளோ திருத்துப்படலாம் மரணதண்டனை கொடுத்தால் கொடுத்ததுதான். சமூகநலனுக்காக மரணதண்டனை என்ற மாயப்பூச்சு
சமூகத்தில் எந்த நல்மாற்றங்களையும் உருவாக்கவில்லை. இது வெறும் சமூகத்தினதும் சட்டத்தினதும் பழிவாங்கலாகவே உள்ளது.
இப்படிக் கடுமையான சட்டங்களால் சிலமனிதர்களை, சமூகங்களை சிலகாலம் பயமுறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் அது நிலையானது அல்ல. நீயூட்டனின் முன்றாவது விதி எல்லாவிடங்களிலும் பாவிக்குமாறே உள்ளது. தாக்கத்துக்கு சமனும் எதிருமான மறுதாக்கங்கள் எங்குள் உள்ளது. எங்கு மிகக்கடுமையான சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகிதோ. அங்கேதான் சட்டமீறல்களும் அத்துமீறல்களும் அதிகமாக உள்ளன. பயமுறுத்தி ஒருமனிதனையோ, ஒரு சமூகத்தையே திருத்திவிட முடியாது. மயூரன் போன்றவர்களுக்கு பிடிபட்டால் என்ன தண்டனை என்பது நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் கடத்தலைச் செய்யாது இருந்தார்களா? இல்லையே
குற்றங்கள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து அதைத் தடுப்பதன் மூலமாகவே குற்றங்களைத் தடுக்க முடியும். தண்டனைகளால் குற்றங்களை சட்டமீறல்களைத் தடுக்க முடியாது. குற்றத்தின் சட்டமீறல்களின் காரணிகளாக அமைவன வளர்ப்பு, சூழல், தொடர்பு, வாய்ப்பு. பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதற்கான அறிவு பெற்றோர்களுக்கு அரசால் கொடுக்கப்படுகிறதா? இல்லை. சூழல், தொடர்வு, வாய்ப்பு எப்படி உருவானது? இவற்றை உருவாக்கிக் கொடுத்ததே சமூகமும், சட்டமும் தானே. இப்படி இருக்கும் போது முழுப்பிழையையும் ஒரு தனிமனிதனில் போட்டு அவனின் வாழ்வை விலைமதிப்பற்ற உயிரைக் பறிக்கிறீர்கள்.
பக்தி கூடப் பயத்தில் தான் வருகிறது, பயமுறுத்தித்தான் நீதியை நிலைநாட்ட முடியும், மரணபயம் இருக்கும் போதுதான் உயிருக்குப் பயந்தாவது குற்றம் செய்யாது இருப்பார்கள் எண்ணலாம். சரி காலங்காலமாக தண்டனை கொடுத்து சமூகத்தை முழுமையாகச் சீர்திருத்த முடிந்ததா? குற்றங்களே மறைந்துவிட்டதா? இனிக்குற்றங்களே நடக்காதா? மரணதண்டனை என்று களையெத்தார்களே ஆனால் களைகளை அடியோடு களைய முடிந்ததா? போதைவஸ்துப்பாவிப்பவர்களுக்கும், கடத்துபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் மரணதண்டனை கொடுத்துவரும் இதே இந்தோனேசியாவில்தான் 14நிமிடத்துக்கு ஒருவர் போதை வஸ்துப்பாவித்து இறக்கிறார். இவர்களின் மரணதண்டனைகள் செய்த நற்கைங்கரியம் என்ன? போதைப் பொருள் என்று கருதினால் காப்பி தேநீர் சிகரெட் எல்லாமே தொங்கி வாழச்செய்யும் போதைப் பொருட்களே. சிகரெட் பிடிப்பது உடலுக்குக் கேடு என்று சிகரெட் பெட்டியில் எழுதிவிட்டு விற்பனையை அனுமதித்து பணம் பண்ணுகிறார்கள். அதேபோல் போதைப் பொருளுக்கும் செய்யலாமே. மது செய்யும் அதே வேலையைத்தான் போதைவஸ்துக்களும் செய்கின்றன. போதைவஸ்துப் பாவனையின் தாயாக அமைவது மது. மதுவே வல்லுறவு வன்கொடுமை பாலியல்வல்லுறவு போன்ற கொடுமையான காரியங்களுக்குத் துணைபோகும். போதைவஸ்து உட்கொண்டவர் முளை மனத்துடன் அது நின்றுவிடும். அந்த வஸ்துக்கிடைக்காது போது அதைத்தேடியே வேகம் கொள்வார்களே தவிர போதை வஸ்துப்பாவித்தவர்கள் பாலியல்வல்லுறவு கொள்வதில்லை. இதன்தாக்கம் மூளைக்கு மட்டுமுரியதே தவிர உடல்ரீதியானது அல்ல. சமூகத்தின் நீதி நீதியற்றே இருக்கிறது. இதற்காக போதைவஸ்துக்களைப் பாவியுங்கள் என்று கூறவில்லை. சமூக அக்கறை இருந்தால் மற்றை தங்குதன்மை கொண்ட வஸ்துக்களையும் தடுத்து நிறுத்துங்கள்.
 மரணதண்டனைக்கெதிரான மாற்றுவழி என்ன? மாற்றுவழி என்பது சிந்திக்கப்பட வேண்டியது. ஆனால் மரணதண்டனை ஒருபோதும் ஒரு நல்ல மனிதனையோ
சமூகத்தையோ உருவாக்காது என்பது ஐயம் திரிபற்றது. மரணதண்டனை வளங்கப்படும் நாடுகளில் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் எவரும் தாம் பிடிபடுகிவோம் என்று எண்ணிச் செய்வதில்லை. செய்தபின்னர் வருந்திப் பிரயோசனமும் இல்லை. இம்மரண தண்டனைகள் சாதித்தது என்ன? மயூரனுடன் கொலை செய்யப்பட்டவர்களை மட்டுமா சட்டம் தண்டித்தது? இவர்களை நேசித்த உறவுகள், நட்புகள், அனைவரையும் சேர்த்தல்லவா தண்டித்தது. மயூரனுக்கு மரணதண்டனை அது முடிந்துவிட்டது அவனும் முடிந்துவிட்டான். ஆனால் அவன் குடுப்பத்தினருக்கும், உறவுகளுக்கு, நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஆயுள்தண்டனை அல்லவா இது எதற்கு? குற்றமே செய்யாதவர்களுக்குத் தண்டனை எதற்கு? இதைப் தூரவிருந்து பார்த்த நாங்களும் தண்டிக்கப்படுகிறோம். நான் செய்த குற்றம் என்ன?
தண்டனை கொடுத்துக் கொடுத்தே சமூகத்தைத் திருத்தமுடியாதென அறிந்த மேற்குலகம் சிந்தித்து, விவாதித்து, அறிவிரீதியாக உணர்ந்தே மரணதண்டனையை
இல்லாது செய்தது. இதனால் குற்றங்கள் குறைந்ததோ இல்லையோ கொலைகள் குறைந்தது என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.
 கொலை செய்வது குற்றம் அதற்கும் மரணதண்டனை தான் முடிவு எனும் இந்தோனேசிய இஸ்லாமியச்சட்டம் மயூரனையும் இவருடன் 8ப் பேரையும் கொன்றது. இவர்களைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை எப்போ? மரணதண்டனையால் எதைச் சாதிக்க முடிந்தது? மரணம் அழிக்குமே தவிர எதையும் ஆக்காது. 24வயதாக இருந்தபோதே மயூரன் பிடிபட்டான். தெரிந்தே, தெரியாமலே,
சமூகச்சூழலாலே, பணத்தாசையாலே இதை அவன் செய்தான். அன்று அவன் குற்றவாளியாகக் காணப்பட்டான். ஆனால் அவன் மனம்திருந்தி தனது நற்பங்களிப்பை சமூகத்துக்குக் கொடுத்தான். தன்னுடன் வாழ்ந்த சகசிறைக்கைதிகளுக்கு தற்காப்புக்கலை, கணினிபயிற்சி, சித்திரம் போன்றவற்றைப் கற்பித்தான். உணர்வுகளைச் சித்திரமாக வரையும் கலையை சிறையிலேயே கற்றுக்கொண்டான். இவனுடன் பிடிப்பட்ட அன்ரு என்பவரும் தன்பழைய காதலியை மணந்தார், திருந்தி போதகராக மாறவிருப்பினார். இவர்கள் திருந்தி வாழ்ந்தபோதே சட்டம் அவர்களைத் தண்டித்தது. குற்றவாளியாக உள்ளபோது தண்டிக்காத சட்டம் அவர்கள் திருந்தி வாழும்போது தானே தண்டித்தது. இத்தண்டனை சரியானதா? இங்கே கொன்று குவித்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதே ஒரு திறமையை தம்மிடத்தில் கொண்டவர்கள் தான். இவர்களுக்கு திருந்தும் உரிமை கூடக் கொடுக்கப்படவில்லை எனும்போது இப்படி ஒருதண்டனை அவசியமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர்களை விட்டுவிட்டு கொண்டுண்ட காசைப் பொறுக்கியவர்களை அல்லவா தண்டித்தது. இது நியாயமா?ஒரு கிடங்கினுள் போதைவஸ்து தயாரிக்க இயலாது. இப்படித் தொழிற்சாலைகளால் தயார்படுத்தப்படும் போதை வஸ்துத் தயாரிப்பாளர்களை பிடித்துத் தண்டிக்க வக்கற்ற அரசும் சட்டமும் பாவனையாளர்களையும் இடைத்தரகர்களையும் தானே தண்டிக்கிறது. பெருங்குற்றவாளிகள் எங்கே சுகபோகமாக வாழ அற்ப ஆசைகொண்ட அப்பிராணிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். ஒருதயாரிப்பாளன் ஒராயிரம் விற்பனையாளர்கள் பலகோடி பாவனையாளர்கள். ஒரு தயாரிப்பாளனை அழிப்பதனூடாக பலகோடி பாவனையாளர்களைத் தடுக்கலாமே. இதை எந்த அரசும் முறையாகச் செய்ததில்லை. எந்த இஸ்லாம் போதைவஸ்துப் பாவிப்பது தப்பு, தண்டனைக்குரியது, மரணதண்டனை விதிப்பப்படவேண்டியது என்றதே அதே குரானை சரியாவைச் சட்டமாகக் கொண்ட இஸ்லாமியர்களும் இஸ்லாமிய நாடுகளுமே போதை வஸ்துக்களை ஏற்றுமதி செய்கின்றன. உ.ம் பாக்கிஸ்தான் ஆப்கானித்தானில் பெரும் தொழிற்சாலையாக நாட்டின் வருமானமாக இப்போதைப் பொருட்களை தயாரித்து வினையோகிக்கிறார்கள். இதில் இந்தோனேசியாவும் அடங்கும்.
மரணதண்டனைக் கெதிரான மாற்றுவழிகளைக் கட்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதனூடாக மேற்குலகம் பலவெற்றிகளைக் கண்டுள்ளது. சீர்திருத்து நடவடிக்கைகளூடாக மரணதண்டனை எனும் கொலையைகளை நிறுத்தியதுடன் மனிதவளங்களை பயன்படுத்தி நாட்டை வளப்படுத்தி மனிதநேயத்தை வளர்த்துள்ளனர். ஒவ்வொரு மனிதனும் மாறுவான், திருந்துவான் என்ற அடிப்படை நம்பிக்கை மனிதர்களின் மத்தியில், அரசின் மத்தியில், மனங்களில் விதைக்கப்படவேண்டும். பெரிய கனமான பாரதூரமான குற்றங்களைச் செய்தவர்கள் மனந்திருந்தியதால் மன்னிப்பழிக்கப்பட்டு குற்றத்தடுப்பு இலாகாவில் பெரியபதவியில் உள்ளனர். ஒவ்வொரு மனிதனும் விலைமதிப்பற்ற வளங்களையும், சக்திகளையும் கொண்டவர்கள். மரணதண்டனை என்பது மாற்றுச்சிந்தனையற்ற, மூளைவளமற்ற மனிதர்களாலும் அரசாலும் நிறைவேற்றப்படும் ஒரு துர்காரியமே. யார் குற்றவாளி? பிடிபட்டபின்னர் தானே ஒருவன் குற்றவாளியாகிறான். அப்போ பிடிபடாமல் குற்றம் செய்பவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்ற பெயரில் வெளியில்தானே இருக்கிறார்கள். பிடிபடமாட்டார்கள் என்று எண்ணித்தானே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிடிபட்டபின்னர் குற்றவாளியாகக் கண்டு மரணதட்டனை வளங்குவதா? அல்லது வாழும்போதே குற்றச்செயல்களில் ஈடுபடாது பார்த்துக் கொள்ளவதா சிறந்தது? மரணதண்டனையை நிறுத்தி, குற்றவாளிகள் திருந்துவதற்கான சந்தர்பத்தைக் கொடுத்து, அவர்களின் முற்போக்கினைக் கண்டறிந்து, தண்டனையைக் குறைந்து, வளமுள்ள மனிதர்களை உருவாக்கி சமூகத்துக்கு பயன்பாடுள்ள மனிதர்களாக வெளியே விடுவதே நியாயமான சட்டமாகவும் மனிதநேயம் கொண்ட மனிதர்கள்வாழும் நாடாகவும் கருதமுடியும்.
அன்று தண்டனை அளிக்கும், தண்டனை நிறைவேற்றும் கூடங்களாகவே அன்று சிறைச்சாலைகள் இருந்தன. இன்று அவை சமூகத்துக்கு ஒவ்வாதவர்களை தனியே பிரித்து அவர்களை சமூகத்துக்கு ஏற்றமனிதர்களாக மாற்றும் கோவில்களாகவே சிறைகள் இன்று அறிவுயீவிகளால் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை இருந்தாலும் திருந்தும் வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறது. மரணதண்டனைகளால் எதையும் சமூகம் சாதித்ததில்லை. சாதிக்கப்போவதுமில்லை. கடவுளை நம்பும் மதவாதிகளே! கடவுளின் சிருஸ்டியைக் கொல்வதற்கு நீங்கள் யார்? சந்தர்ப்பம் சூழலே மனிதனை உருவாக்கிறது, புடம்போடுகிறது. ஆதலால் மனிதர்கள் மாறுவதற்கோ திருந்துவதற்கே மதங்களும் சமூகங்களும் அனுமதிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான சூழல், தொடர்புகள், மனிதநேயச் செயற்பாடுகளை வளர்த்து மரணதண்டணைக்கு மரண அடி கொடுக்கப்படவேண்டும்.
மரணதண்டனையை வெறுக்கும்
நோர்வே திலீபன்.
Posted in கட்டுரை | 4 பின்னூட்டங்கள்

மே தினம் / அன்னைமயம் 01.05.2015

அன்னைமயம்10423304_10205013836040221_6959504230941396529_n

விரலை வெட்டியது கத்தி
அம்மா என்றழைத்தது புத்தி
கத்திக் கத்தி
விரல் வழி வெளியேறியது
அம்மாவின் பால் சிவப்பாக.
இதயம் மார்புக்கூட்டை
தட்டத் தட்ட
தொட்டுப்பார்த்தேன்
அது தாளம் போடுகிறது
அம்மாதா…அம்மாதா
அம்மாத்தா…!
எனைக்காக்க
அம்மாபோல் ஒரு அம்மாவை
தேர்ந்தெடுத்தால் – அவள்
என்னை அப்பாவாக்கிவிட்டாளே
அப்பப்பா…. அப்பாடா
எங்கும் சிவமயம் என்பது பொய்
அனைத்தும் அன்னை மயமே.
சிவமயமே என்றும் சிவமயமே
பவபயமில்லையடி
அன்னைமயமே
என்றும் அன்னை மயமே
நோர்வே நக்கீரா. 1.05.2015

மே தினம்…!!! -நோர்வே நக்கீரா (கவிதை)

17__mai

மே தினம்…!!!

மேய்தினம் மேயப்படுகிறது
மனிதத்தை மேய்ந்து காயப்படுகிறது
தொழிலே செய்யாத
தொழிலாளர் தோழன் மாக்ஸ்சின்
குரு சீடப்பரம்பரை இன்றும் தொடர்கிறது.
தொழிலாளர் போராட்டம்
இன்று சோசலில் இருந்தபடி
சோக்காக தட்டச்சில் படர்கிறது
8மணிநேரம் தூக்கம்
8மணிநேரம் வேலை
3மணிநேரம் வேலைக்குப் பயணம்
1மணித்தியாலம் வேலைக்குத் தயாராதல்
மீதி 4மணித்தியாலங்கள் மட்டும் தான்
குடும்பம்…குட்டிகள்
சமையல்…சாப்பாடு
கழுவல்… துடையல்
இதுதான் வாழ்வா? தொழிலுக்காய் சாவா?
பணதேடும் அடிமைகளுக்குப் பெயர் தொழிலாளி.
வயிற்றுக்கு உணவளிக்க
பயிற்றுக்குள் கால்வைக்கும் விவசாயி
தன்வயிறு ஏதுமின்றி
ஒட்டிய வயிற்றுடன் தூக்கில் தொங்குகிறான்.
கொம்பியூட்டரை
கொட்டக் கொட்டப்பார்த்து
கண்கெட்டுப்போனவன்
கதிரைகளின் கொழுக்கிறான்
மெலிய மாத்திரை எடுக்கிறான்.
பேப்பர்களில் எழுதி
பேப்பர் தயாரிக்கும்
பேப்பர் கூட்டத்துக்கு
பேப்பர் பணமும்
அலுவலகச் சிறையும்.
பாசிஸ்டுக்களும்
நாசிஸ்டுக்களும்
ரெறொறிஸ்டுக்களும்
தொழிலாளர் இரத்தம் தோய்ந்த கொடியுடன்
முன்வரிசையில் மூச்செறிந்து பேச்செறிய
போகிறது மேதின ஊர்வலம்
தொழிலளர் கல்லறைகள் நோக்கி
மே டேய் (may day-lober-worker day)
மேடேய் ஆனது (mayday)
நோர்வே நக்கீரா 01.05.2015
Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

வேரில் விழுந்த விசம் 1

untitled
பிரிவினைவாதம் ,துவேசம், இனமுரண்பாடுகள், கலவரங்கள்,போர் போன்றன இன்று நேற்று இலங்கையில் உருவானதல்ல. இவை ஆதியில் இருந்தே ஆணிவேரில் ஊற்ற ப்பட்ட நஞ்சுகள். இவற்றைச் சரியாக இனங்கண்டு செயற்பப்படாவிட்டால் இருவினமும் அழியும் என்பது திண்ணம். அன்று நடந்தவைதான் மீண்டும் மீண்டும் இன்றுவரை நடக்கிறது என்பதே இதற்கு ஆதாரம். பொதுவெதிரியான வெள்ளையர்களை வெளிறே ற்றுவதற்காக தமிழ் சிங்களம் இணைந்ததே தவிர உதிரத்தில் ஊறிய நஞ்சு இருந்து கொண்டேதான் இருந்தது. வடக்கு தெற்குப்பகுதிகளை இருசாராரும் மாறிமாறி ஆண்டு வந்தாலும் மதரீதியாக நம்பிக்கைகளும் முரண்பாடுகளும் ஆரம்பித்தில் இருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்பட்ட மதஇ அரசியல் மாற்றங்கள் இலங்கை யில் அன்றில் இருந்து இன்றுவரை பிரதிபலிப்பதை அவதானித்திருப்பீர்கள். தேவநம்பி தீசனின் மதமாற்றத்துக்குப்பின்னரே வடக்குத் தெற்கு என்ற பிரவும்இ பெருமுரண்பாடு களும் மிகவேகமாகவும் ஆளமாகவும் வேரூன்றியதை அவதானிக்க முடிகிறது.
எழு என்று இன்று மருவிய ஈழு என்ற முற்றுப்பெறா மொழியைப் பேசிவந்த ஒரேயின மக்களான இயக்கர் நாகரின் நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தன. ஈழுமொழி பேசியவர் கள் வாழ்ந்தநாடு என்பதாலே இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டது என்கிறர் கலாநிதியும் பேராசிரயருமான செங்கiயாளியான். தமிழர்களாகிய நாகர்கள் நாகங்களை வளிபட்டுவந்தமை சான்றுக்குரியது. புத்தர்பெருமான் ஐந்துதலை நாகங்க த்தின் கீழ் சயனத்திலும்இ நிஸ்டையிலும் இருப்பது நாகர்கள் பௌத்தமத்தைத் தழுவி யிருந்தார்கள் என்பதற்குச் நற்சான்றாகக் கூட அமையலாம். கடவுளை ஒரு மனிதனா கவோ தத்துவமாகவோ கருதாதஇ விஞ்ஞானமே எட்டிப்பார்க்காத காலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றியும்இ தமது சக்திக்கு மீறிய இயற்கையின் சக்திகளை கடவுளா கவும்இ தேவதைகளாகவும் கொண்டு வணங்கினர் என்பது ஆய்வு.
காதாநாயகத்துவம்
காமினி எனும் துட்டகைமுனுவை கதானாயனாக்க எழுத்தப்பட்ட மித்துக்கதையே மகாவம்சம் என்று தெரிந்தும் அதை சரித்திர மதவாதாரமாக காட்ட முயலும்போது அதையே வைத்து அவை தவறானவை என்று நிரூபிக்க வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படுகிறது. பாழிமொழியில் மகாநாம எனும் பல்லவதேரரால் எழுதப்பட்டு கிடக்கை யில் கிடந்த மகாவம்சத்தை ஆங்கிலேயரின் காலணித்துவ காலத்தில் தூசு தட்டி 1837ல் கியோர் துநோர் என்பவரால் ஆங்கிலத்தில் புத்துயிர் கொடுத்த பொல்லாமை நிகழ்ந்தது. துட்டகைமுனு கதாநாகனாகிறான் என்றால் அவன் மோதியவனும் அவனைவிட அதிபலசாலி என்பதே மறைமுகமான அர்த்தமாகிறது. வெல்லப்பட முடியாததை வெல்வதுதானே கதாநாயகத்துவம்.
மகாவம்சத்தில் பாரபட்சம்
44ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த எல்லாளனை 21செய்யுள்களுக்குள் அடக்கும் மகாநாம என்ற பல்லவப்பிக்குவால் எழுதப்பட்ட மகாவம்சம் 24வருடங்கள் மட்டம் அரசாண்டு துட்டகாமினியை 843 செய்யுள்களில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இங்கேயே தெரிகிறது மாகாவம்சத்தின் நம்பத்தன்மையும் நடுநிலையும். ஆனால் துட்டகைமுனு வின் காலத்திலோ அன்றி மகாவம்சத்தின் காலத்திலோ சிங்களவர் என்றொரு இனம் இருந்ததாக எங்குமே அடையாளம் காணப்படவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. துட்டகாமினி இயக்கன் என்தற்கான ஆராரங்களை எந்த ஆய்வாளர் களும் இன்னும் முன்வைக்கவில்லை. இவனுடைய அடி முத்துசிவன் (மூத்தசிவன்-ஊத்தைசிவன்)எனும் நாககுலத்திலிருந்தே ஆரம்பமாகிறது ஆதாரம் மகாவம்சம் இதன்படி பார்த்தால் இலங்கையில் நடந்த போர்களும், படுகொலைகளும் சகோதரப்படு கொலைகளே. இந்தமகாவம்சம் செய்த ஒரு கைங்கரியம் ஒரினமாக இருந்த ஈழமக்களை துண்டாடி, முரண்பாடுகளுக்கு உள்ளாக்கி, போர்களுக்குக் காரணமாகி கொடுங்கோண்மைக்கு வித்திட்டது. மகாநாம என்ற பல்லவ வந்தேறியின் புனைவு இலக்கியமாக உருப்பெற்றிருக்கிறது.
பௌத்தத்தினதும் சிங்ளப்பேரினவாத்தினதும் கைநூலான மகாவம்சம் பல அசிங்க மான வரலாற்றுப்பின்னணியைக் கொண்டது. சிங்கத்துக்கும் வங்கநாட்டு அரசிக்கும் பிறந்த பிள்ளைகளான சிங்கபாகு சிங்கவல்லி என்ற சகோதரங்கள் கலந்த 16பிள்ளைகளில் மூத்தவன் விஜயன் என்கிறது மகாவம்சம். அவன் குவேனியுடன் பிறந்தபிள்ளைகள் சிங்களவர்கள் என்றால் சிங்களப்பிறப்பு எப்படிப்பட்டது என்பதை எண்ணித்துணிக. சகோதரியில் இச்சைகொண்டு பிறந்த இந்தவம்சத்தினர் முள்ளிவாய்க் கால் இறுதிப்போரில் தமிழ்பெண் பிணங்களில் இச்சைகொண்டார்கள் என்பது பரம்பரை க்குணம் வம்சக்குணம் உதிரத்தில் ஊறியவிசம் என்றே கருதவேண்டியுள்ளது.
இந்தவேர்கள் எங்கிருந்து உருவாயின என்பதை பார்ப்போம். சரித்திரம்இ வரலாறு என்பது மிக மிக நீட்டது என்பதனால் தேவநம்பியதீசனில் தொடங்கி எல்லாளனுடன் நிறுத்துகிறேன்
இடப்பெயர்கள்: உருகுணை- கதிர்காமத்தை அண்டிய தென்மாகாணப்பகுதி
கல்யாணி ஆறு -களனி ஆறு
உத்தரதேசம்- பூநகரியை அண்டிய வன்னிப்பகுதி
மேற்குறிப்பிட்ட பெயர்கள் அடிக்கடி கட்டுiரையில் இடம்பெறுகிறது என்பதால் முன்கூட்டியே அவற்றை இங்கே தருகிறேன்.
வடக்குத் தெற்கு பிரிவினை, தேவநம்பியதீசனின் பரம்பரை
மானைத்துரத்திக் கொண்டிருந்த மூத்துசிவனின் (சைவப்பெயர்) மகன் தேவநம்பியதீசன் (தீசன் என்பது ஈசன் என்றும் பொருள் கொள்ளும்) மகிந்த (காலபதியான அரசின் ஜனாதிபதியும் மகிந்தவே- இனமத அழிப்பின் ஆணிவேர்கள்) எனும் பௌத்தபிக்குவின் குரலால் “மானைத் தொடரும் மன்னரே மதியைத் தொடர்வீராக” தடுத்து நிறுத்தப்பட் டான். கொல்லாமையை முதன்மைப்படுத்தும் பௌத்தம் போதிக்கப்பட்டு அவன் பௌத்தனாக மாறினான். மன்னனைத் தொடர்ந்து மக்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டனர். பௌத்தர்கள் அனைவரும் சிங்ளவர்கள் அல்ல என்பதை சிங்களவர் களும் தமிழர்களும் அறிவது அவசியம். பெரிய பௌத்த மடாலங்களுக்கு தமிழர்கள் தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுண்ணாகத்திலுள்ள கந்ததேராடை என்ற பகுதியில் இருந்தே பௌத்தசங்கங்கள் மதம்பரப்பு வேலையைச் செய்தன. அன்றும் அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் சிங்களவர்கள் அல்ல. உலகின் கிழக்குநோக்கி பௌத்தப்பரம்பலான திராவிடப்பௌத்தத்தின் ஆணிவேராக இருந்தவர்கள் தமிழர்களும் பல்லவர்களும் என்பதை மறந்துவிடலாகாது. பௌத்தமத காலத்திலேதான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது என்பதை ஐம்பெரும்காப்பியங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. ஈழத்தின் வடக்குக் கிழக்கில் வளர்ந்த பௌத்தம் அதிககால் அங்கே நிலைகொள்ளவில்லை. காரணம் இந்தியால் ஏற்பட்ட இந்துமதத்தின் மீள்வளர்ச்சியும் வாத விவாதங்களின் தோல்வியும் பௌத்தத்தை இந்தியாவை விட்டு ஓட ஓட விரட்டின. இதற்கு சமயகுரவர்களின் பங்கும் அதிகம். இந்தமாற்றம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தமையால் இந்து பௌத்த முரண்பாடு ஈழத்துக்கு இறக்கு மதியானது. இதுவே அடிப்படையில் வேரில் ஊற்றப்பட்ட நஞ்சாகும்.
தேவநம்பிய தீசனுக்குப்பின் நடந்த போர்கள் அனைத்தும் வடக்கு தெற்கு என்ற நிலையிலேயே இருந்தது. தேவநம்பிய தீசனின் தம்பியான மகாநாகன் தேவநம்பிய தீசனுக்குப்பின் பட்டத்துக்குரிய இளவரசனாவான். இதை விரும்பாத தேவநம்பியதீச னின் மனைவி தன்மகனே முடிக்குரியவனாக வேண்டும் எனவிரும்பினாள். அதனால் மகாநாகனுக்கு (மச்சான்-கணவனின் தம்பி) மாம்பழத்தினுள் நஞ்சுவைத்துக் கொல்ல நஞ்சூட்டிய மாங்கனியைக் கொடுத்தனுப்பினாள். அதை மகாநாகனின் மகன் உண்டு உயிரைவிட்ட தந்தையும் (மகாநாகன்) மனைவி, மக்களும் உருகுணைக்கு சென்று மகாகமம் (தோட்டத்தை நாம் கமம் என்ற சொல்லைக்கொண்டு இன்றும் பாவிக்கிறோம்) என்ற நகரத்தை நிறுவி உருகுணைக்கு அரசனானான். அவனின் மகன் ஜத்தலாயதீசனும் அவனின் மகன் கோதபாயனும் (மகிந்த அரசின் பாதுகாப்புச் செயலாளரின் பெயரும் இதுவே) உருகுணை மன்னர்கள் ஆயினர். இவன் கதிர்காமப்பகுதியில் அரசனார்களாக இருந்து 10சத்திரியமன்னர்களை பலத்தபோரின் பின் அழித்தே அரசனானான் என்கிறது தட்டுவம்சம்( கிஸ்ரி ஆவ் சிலோன் தலைப்பு 111 பக்கம் 146). கோத்தபாயனின் பேரனான மகாநாகன் அநுராதபுத்தில் இருந்து ஆதரவற்றுத் ஓடிவந்தபோது அபயமளித்து காத்த கதிர்காமப்பகுதியின் குறுநிலமன்னன் கமணியை பிள்ளைகளே இந்தப் 10சத்திரிய மன்னர்கள் என அறியமுடிகிறது. இதனுடைய படிமத்தை எமது அரசியலிலும் காணமுடிகிறதா? நம்பிக்கைத் துரோகம்இ நன்றியின்மை உண்டவீட்டுக்கு இரண்டகம் என்பனவற்றை தமிழ் அரசியல் உணர்ந்திருக்கிறது. சேர் பொன் இராமநாதன் சிங்களவர்களைத் மாசல்சட்டத்தில் இருந்தும், ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து காத்து விட்டார். அவரை தேரிலும் தோழிலும் தூக்கிவந்த சிங்களம் எம்மக்களுக்கு என்ன செய்தது. நாட்டை எடுத்தபின் பிரிப்போம் என்று வாக்குறுதியளித்த ஐ.தே.கட்சியில் தந்தை தன்வாக்குக்கு எதிராகவே செய்யற்பட்டார். பிரிவினைக்கு எதிராக நடேசன் மகாதேவ போன்றவர்களை வாங்கி சோல்பரித்திட்டத்தில் பிரினைக்கு மண்ணள்ளிப்போட்டனர். பின் என்ன நடந்தது என்பதை அறிவீர்கள். இதேபோன்று புலிகளின் ஆதரவுடன் வந்த மகிந்தவும் இன்றைய கோத்தபாயனும்; புலிகளை என்ன செய்தார்கள் என்பதையும் அறிவீர்கள். நம்பிக்கைத் துரோகம், செய்நன்றி மறத்தல் என்பன இது வேரில் விழுந்த விசங்களே.
இருப்பினும் தமிழ்சத்திரியர்களை அவர்களால் அடியோடு அழிக்க முடியவில்லை. இம்மன்னர்களின் மூத்தவனான தர்மராஜனின் மகன் மாகாதீசன் சத்திரிய மன்னன் ஒருவனின் மகளை அபி அனுரதியை மணந்ததாக பிராமிக்கல்வேட்டில் கண்டெடுக் கூறுகிறது. (மகாவம்சம் தலைப்பு111 பக்கம் 147) இந்த அடியோடு அழித்தல் என்பது முள்ளிவாய்க்காலை நினைவு படுத்துகிறது அதையும் இதையும் செய்தவர்கள் கோத்தபாயர்களே. வேரில் விழுந்த விசங்கள் இவர்கள்.
கோத்தபாயனின் மகன் காக்கவண்ணதீசன் ஈழராஜனான எல்லாளனின் ஆட்சியை ஏற்று திறைசெலுத்தி வாழ்ந்தான். இலங்கை முழுவதும் எல்லாளனின் ஆட்சி இருந்தற்கான சாட்சி இதுவே. இவன் திருமணம் குறுநிலமன்னனான கல்யாணி அதாவது இன்றைய களனியை ஆண்ட களனித்தீசனின் மகள் மகாதேவியையே.
களனித்தீசனின் மனைவிக்கும் அவன் தம்பி அய்யவுத்திகனுக்கும்; உள்ள கள்ளதொடர்பு தெரியவர அவன் தலைமறைவாகி காதல் கடிதம் ஒன்றை பிக்குகள் மூலம் அனுப்பியபோது அது பிடிபடவே கடிதத்தைக் காவிவந்து பிக்குக்கள் இருவரின் தலைவெட்டுப்பட்டு கடலில் எறியப்பட்டது. செகுவேரா கலவரத்தில் தம்மினம் என்றும் பாராமல் சிங்கள இளைஞர்களை வெட்டி களனிகங்கையில் எறிந்தது நினைவுக்கு வருகிறது. புத்தபிச்சுக்களின் தலையை வெட்டி கடலில் எறிந்ததால் தான்; கடல்கொந்தளிப்பு கல்யாணிமேல் (களனிகங்கை) ஏற்படுகிறது என்ற மூடநம்பிக்கையில் தனது மகளான மகாதேவியை ஒரு வள்ளத்தில் ஏற்றி கடலில் விட்டான் களனிதீசன். அந்தவள்ளம் மகாகமத்தின் விகாரைகள் உள்ள கரையை அடைந்தது. அதனால் மகாதேவியாக இருந்தவள் விகாரமகாதேவி என்று அழைக்கப்பட்டாள். இவளை திருமணம் செய்தவன்தான் கோத்தபாணனின் மகன் காக்கவண்ணதீசன். இவளின் மசக்கை ஆசைதான் துட்டகைமுனுவை எல்லாளனுக்கெதிராக வளர்த்தது. அவளின் 3 மசக்கை ஆசையில் ஒன்றுதான் எல்லாளனின் முதன்மைத்தளபதியின் தலையை வெட்டிய வாளைக்கழுவிய தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பது. இந்தக் கொலைவெறிகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன என்பதை இனியாவது உங்களால் உணரமுடிகிறதா? இவளுக்குப்பிறந்த மூத்தவன்தான் கைமுனு எனும் காமினி. துர்நடத்தையின் காரணமாகவே துட்டகைமுனு என்று அழைக்கப்பட்டான். அவனுடைய தம்பி சதாதீசன். பிள்ளைகள் இருவரும் தாயினால் எல்லாளனுக்கெதிராக மனதில் நஞ்சூற்றியே வளர்க்கப்பட்டார்கள். குழந்தைகளான இவர்களின் ஆணிவேரில், மரபணுவில் தாயாரால் ஊற்றப்படுகிறது.
எல்லாளனின் நல்லாட்சி
இலங்கை முழுவதும் பரவியிருந்த எல்லாளன் நல்லாட்சியில் பௌத்தமதம் மற்றைய மதங்களைப்போல் பாதுகாக்கப்பட்டதால் இந்நல்லாட்சியை மறுக்க மகாவம்சத்தை எழுதிய பல்லவ மகாநாமதேரரால் முடியவில்லை. எல்லாளன் மனுநீதிச் சோழனுக்கு நிகராக ஒப்பிடப்பட்டான். எல்லாளனை சோழ அரசன் என்பது முற்றிலும் தவறா னது இந்திய வரலாறுகளிலோ, கல்வெட்டு,அகழ்வாய்வுகளிலே எல்லாளனைப் பற்றிக் எதுவும், எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவன் தமிழீழத்தைச் சேர்ந்த தனித்தமிழ் உத்தரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அரசன் என்பதற்கான பல ஆராரங்கள் உள்ளன. பாளிமொழியில் எலாரா என்பதே எல்லாளன் ஆனது இதன் அர்த்தும் ஈழராஜன் என்பது என பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் கருதுகிறார்.
 சேனன், குத்திகன் எனும் தமிழ் மன்னர்களிடம் இருந்து அனுராதபுரத்தை அசேலன் கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். கி.மு 145ல் எல்லாளன் அவனை வென்று அனுராதபுரத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான். எல்லாளனின் சொந்த இடமாக பூநகரியின் தெற்கெல்லையிலுள்ள பாலியாறுப்பகுதி என்று எண்ணித்துணியலாம். வவுனிக்குளத்தின் தோற்றமே எல்லாளனில் இருந்துதான் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாளன் பயிற்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பலகுளங்களை நிறுவி கடலில் வீணாகப்போகும் நீரைத் தேக்கினான் என்கிறது பலவராறுகள்.
 துட்டகைமுனுவின் படையெடுப்பு.
தனது தந்தையான காக்க வண்ணதீசனின் மரணத்தின் பின் அவன் வைத்திருந்த படையுடனும்இ தான் தயாரித்து வைத்திருந்த படையுடனும் தன்தாய் விகாரமாதேவியு டனும் 500பிக்குக்களுடனும் அனுராதபுரத்திற்குத் தெற்கில் இருந்து புறப்பட்டான் துட்டகாமினி. எல்லாளன் போன்ற நீதிதவறா ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளப்ப இயலாது என்பதை உணர்ந்த இவன் இனத்துடன் இணைத்து மதத்தையும் சேர்ந்து யுத்தகோசத்தை அமைத்தான். இந்த இன மத வெறி என்பது தெற்கிலே துட்டனான காமினியால் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது என்பதை இங்கே காணலாம். இதுவும் அடிவேரில் ஊற்றிய நஞ்சே. ஐதேகட்சி, சுதந்திரக்கட்சி, பண்டாரநாயக்கா, ஜேஆர் போன்றவர்களால் துவேசம் மத இனவெறி ஏற்றப்பட்டது என்பதை விட வேரில் பரம்பரையாக சிங்கள இரத்தத்தில் ஏற்றப்பட்ட விசமே இது. ஜேஆர் பண்டாரநாயக்கா போன்ற கிறிஸ்தவர்களும் அரசியலுக்காக பௌத்த வெறிக்குள் அகப்பட்டுக் கொண்ட சந்தர்ப்பவாதிகளே. புத்தபிக்குகளை போருக்கு அழைத்துச் சென்ற துஸ்டன் இந்தக்கைமுனுவே. இந்த விசம் இன்றுவரை பிக்குக்களை அரசியலில் கால்பதித்து நிற்கவைத்தது. கௌதம புத்தரோ அரசசைத் துறந்து வந்தவர். போரை வெறுத்துவர். பௌத்தத்தை உலகெங்கும் பரப்பிய அசோகன் போரே வேண்டாம் அது பாவச்செயலென்று பௌத்தத்தைத் தழுவியவன். ஆனால் இந்தத் துஸ்டன் காமனியோ போருக்கே எதிரான பௌத்தத்தை போருக்காகப் பாவித்தான். இவன் பௌத்த மதத்தின் எதிரியாகத்இ துரோகியாகப் பார்க்கப்படவேண்டிவன்.
 கைமுனுவின் படை முதன்முதலில் மகியங்களையில் எல்லாளனின் படையை சந்தித்தது. இப்படி சிறுசிறு இராவத்தளங்களை அழித்துக் கொண்டு சென்ற கைமுனு படை அம்பதீர்த்தத்திலுள்ள எல்லாளனின் படையை முற்றுகை இட்டும் 4மாதங்களு க்கு மேல் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. காரணம் எல்லாளனின் படைத்தளபதி தித்தம்பம் அதிவல்லவனாக இருந்தான். இருப்பினும் பெண் விடயத்தில் அவன் பலவீனனாக இருந்ததை அறிந்த கைமுனு தன்தாய் விகாரமாதேவியை அரக்கு காயாகப் பாவித்தான். தன்தாயை அன்னியனுக்கு காட்டியும், கொடுத்தும் ஒரு போர் மக்களுக்கோ மனிதர்களுக்கோ மனிதத்துக்கோ தேவையா? இந்த அசிங்கமான, கேடுகெட்ட செயலை இந்தக் கெட்ட ஜென்மம் கைமுனு செய்தான். இதை மாகாவம்சமே தலையில் சரித்திரம் என்றும் கைமுனுவை கதாநாயகன் என்றும் கொண்டாடுகிறது. ஒருதாயை விபச்சாரியாக்கிய பெருமை சிங்களம் தம்பரம்பரை என்று தலையில் வைத்து கொண்டாடும் துட்டகைமுனுவுக்கு உள்ளது. தாயையே விபச்சாரியாக்கியவனின் பரம்பரை பிணங்களுடன் உறவு கொள்ள முயன்றது அதிசயத்துக்குரியதல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். சென்ற பேரினவாத அரசியலில் பெண்கள் அரக்கு காய்களாக இருந்ததை அவதானித்திருப்பீர்கள். கருணா அம்மான் டக்லஸ் போன்றவர்களுக்கும் புலத்தில் இருந்து சென்றவர்களுக்கு மதுவும் மாதுவும் பரிசளிப்கப்பட்டு இரகசியப் படங்கள் எடுக்கப்பட்டு வெருட்டி அரசியல் நடத்திய விதம் வேரில் ஊறியிருந்த விச இரத்தத்தை காட்டுகிறது.
 அவன்படை பொலநறுவையில் எல்லாளனின் படையை முறியடிக்க முடியாது திண்டாடியது. பலமான கோட்டைகள்இ கொத்துளங்கள், அகழிகள் பாதுகாப்பரண்கள் என்று பாதுகாப்புப் பலமாக இருந்ததனால் மேலும் நான்கு மாதத்தக்கு மேல் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இருபடையினருக்கும் பேரழிவு நிகழ்ந்தது. அதன்பின் எல்லாளனின் தலைநகரான அனுராதபுரத்தை நோக்கி நகர்ந்தபோது கிரலகம்இ மகிலநகர் எனுமிடங்களில் துட்டகைமுனுவின் படு படைதோல்வி கண்டது. பேரழிவைச் சந்தித்த அவன்படை உதவிகளை, ஆளணிகளை தெற்கில் உருகுணையில் இருந்து பெறவும், தம்மைத்தயாராக்கிக் கொள்ளவும் காசபர்வதம் எனுமிடத்தில் பாசறை அமைத்துக் கொண்டான். இதை எல்லாளன் அனுமதித்தான் என்பது பெருந்தன்மைக்குரியது. அடியோடு அடியாக துண்டகைமுனுவின் படைகளை முழுமையாக நாசமாக்கியிருக்க முடியும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மைதரும். நஞ்சி பட்டாலும் தொட்டாலும் நஞ்சு நஞ்சாகவே இருக்கும். எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில் போர்நிறுத்தம்இ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற போர்நிறுத்தங்கள் போருக்கான தயார்படுத்தல்களே இதுவரை இருந்திருக்கிறது என்பதையும் காணலாம்?
 மீண்டும் தன்னையும் தெற்கிலிருந்து பெற்ற உதவிகளுடன் அனுராதபுத்திலுள்ள எல்லாளன் கோட்டையை கைமுனு படைகள் சுற்றிவளைத்தாலும். முன்னேறமுடிய வில்லை. பலவீனமான படையை வைத்து வெற்றியை எட்டமுடியாது என்று கண்ட துட்டனான கைமுனு எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். பெருமனதுடன் 72வயது நிரம்பிய கிழவனான எல்லாளன் ஒரு துஸ்ட இளைஞனின் வேண்டுகோளை ஏற்று களம் புகுந்தான். இதுவே எல்லாளன் செய்த முட்டாள் தனமான செயலும் தன் தலையிலேயே வாரி மண்ணைப்போட்ட செயலுமாகும். பெருந்தன்மை என்பது பொறுக்கித்தனத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடாது.
 தனிச்சமரை ஏற்ற எல்லாளன் தனது மகாபர்வதம் என்ற பட்டத்துயானையிலும்இ துட்டன் கண்டுலன் எனும் யானையிலும் இருந்தபடி சமரை எதிர்கொண்டிந்தனர். 72வயது எல்லாளனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது துட்டகைமுனு யுத்த தர்மத்துக்கு எதிராக தனது யானையை எல்லாளனின் யானைமேல் ஏவிவிட்டான் அது தன்தந்தத்தால் எல்லாளனின் யானையைத்தாக்க மகாபர்வதம் நிலத்தில் சாய்ந்தது. அத்துடன் மாமன்னன் எல்லாளனும் சாய்ந்தான். அந்த வேளைபார்த்துஇ எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்னால் மீண்டும் யுத்ததர்பத்தை மீறி தனது ஈட்டிகளை எறிந்து மாவீரன் எல்லாளனை கெட்ட கைமுனு கொன்றான்.
 தனிச்சமருக்கு ஒருவரை அழைக்கும் போது பலமும்இ வயது, அனைத்தும் ஏறக்குறைய சமனாக இருக்கவேண்டும். இதை துட்டன் செய்யவில்லை. மாவீரன் எல்லாளனிடம் பெருந்தன்மை இருக்கலாம் ஆனால் அது நீதியற்ற ஏமாற்றுத்தனத்துக்கு துணை போயிருக்கக் கூடாது. யானைப்போர் என்பது ஆயுதபலத்திலும் அதைக் கையாளும் திறமையிலேயே போர் வெற்றி அமையும். இங்கே முதலில் யானையை எல்லாளன் யானை மீது ஏவி விட்டதே போர்தர்மத்தை மீறிய செயலாகும். அன்றைய யுத்த தர்மமானது மிருகங்களைப் போருக்குப் பாவிக்கலாம் ஆனால் அவற்றுக்கெதிராக ஆயுதங்களைப் பாவிக்கக் கூடாது. இதைக் கடைப்பிடித்தானா கடையனா கெட்ட துட்டன் கைமுனு? அதுமட்டுமல்ல நிராயுதபாணிமேல் ஆயுதம் பாவிப்பது உயரிய யுத்தமீறலாக அன்றும் இன்றும் கணிக்கப்படுகிறது. யானையால் விழுந்த எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்ரே யுத்தர்மத்தை மீறி எல்லாளன் மீது ஈட்டியை ஏவினான் சிறுமதி கொண்ட கெட்ட துட்டன். எல்லாளன் என்றும் சரணடைந்திருக்க மாட்டான். அப்படி சரணடைவற்குக் கூட அனுமதிக்கவில்லை இந்தத் துட்டன் கைமுனு. இவனை கதாநாயகனாகப் போற்றும் பொன்சேகாவும்இ கோத்தபாயவும் மகிந்தவுமா அனுமதிப்பார் கள். இந்தத் துட்டனின் வாரிசுகளாஇ அவன் உதிரத்தில் உதிர்த்தவர்களாஇ வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாமல் விடுவார்கள். இப்படிச் சரணடைந்தவர் களைக் கொல்லாது விட்டிருந்ததால் தான் இது அதிசயம். அன்று மாகாவம்சத்தில் இருந்து வேர்களில் ஊற்றிய விசங்கள் இன்று விழுதுவிட்டு விருட்சங்களாக இயக்கபரம்பரை அரக்கர்களாகஇ சிங்களப்படையாக பௌத்தபேரின வாதமாக எழுந்து நிற்கிறது. எது அன்று எல்லாளனுக்கு நடந்ததே அதுவே முள்ளிவாய்காலில் எமக்கும் நடந்தது.
போரின்பின்
 வரலாற்றுப் பாடங்களை நான் திருப்பிப் பார்க்கும் போது எது அன்று நடந்ததே அதுவே இன்றும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதாவது பழைய நாகரீகங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது போல போர்இ வாழ்வியல்இ படைப்புக்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. இந்த வட்டத்தை வெட்டவேண்டமாயின் சரித்திரங்களை அறிவதும்இ அனுபவங்களை திரட்டி ஆய்வதுமே வெற்றிக்கான பாதையாக அமையமுடியும். இறந்த பின்னர் செய்யும் மாலைஇ மரியாதையை துட்டகைமுனு செய்தான் ஆனால் துட்ட கைமுனுவின் வாரிசுகள் செய்தார்களா? அரை உயிருடன் கிடந்தவர்களை உயிருடன் புதைத்தார்கள். இறந்தவர்களின் உடல்களை தெருக்தெருவாக நிர்வாணப்படுத்தி தமது பெண்களுக்கு காட்சிக்குக் காட்டி மகிழ்ந்தார்கள். பெண்களை நிர்வாணமாக்கி கொலை செய்தார்கள். பிணத்துடன் இச்சை கொண்டார்கள். விதை விசவிதையாக இருந்தால் நற்பயனுள்ள மரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? எல்லாளன் இறந்ததை அறிந்த அவனின் மருமகன் பாலுகன் ஏழாம் நாள் 6000 படை வீரர்களுடன் பூநகரியில் இருந்து படையெடுத்து வந்து கைமுனுபடைகளைத் தாக்கி தோல்வியடைந்தான்.
போர்களின் பின் மனமுடைந்த கைமுனு தனது கொலைகளை எண்ணி மனம்வருந்தி அமைதி வேண்டி பௌத்ததேரர்களிடம் துயரைச் சொன்னபோது பௌத்தத்தை நேர்மையாகக் கடைப்பிடிக்க முடியாத தேரர்கள்இ பிச்சாந்திகள் கைமுனுவைத் தேற்றினார்கள் இப்படி “பௌத்தத்தை நம்பாத அனைவரும் நரகவாழ்க்கையை அனுபவிக்க வேண்டியஇ விலங்குகளுக்குச் சமமானவர்கள் இவர்களைக் கொன்றால் பாவம் சேராது” என புத்தசங்கத்தால் உரைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் அதிகாரம் எக்ஸ் எக்ஸ் விஇ பக்கம் 175 வரி 75ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பரனவிதான தான் எழுதிய புத்தகமான இலங்கைச் சரித்திரம் (கிஸ்டறி ஆவ் சிலோன்) 3ம் அதிகாரத்தில் பக்கம் 162ல் விளக்கியுள்ளார். இந்தப் போதனை இஸ்லாத்தை நினைவுபடுத்தவில்லையா? எல்லா மதங்களும் ஏறக்குறைய அண்ணன் தம்பிகள் தான்
 துட்டகைமுனு 24வருடங்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆண்டான். இவனுடன் சேர்த்து 44வருடங்கள் தமிழர் அல்லாதவர்களின் கையில் அனுராதபுரம் இருந்தது. வடக்கில் இருந்து 7குறுநிலமன்னர்கள் படையெடுத்து வந்து மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர் என்பதே வரலாறு.
Posted in கட்டுரை | 1 பின்னூட்டம்

தொங்கும் உறவு

Evening-Tamil-News-Paper_92540705205

 

 

தன்னை அறியாமலே
தந்தையில்-பின்
அன்னையில்
தொங்கித் தூங்கினாள்.
ஈன்று புறமெறிந்த பின்
தாயிலும் –பின்
தந்தையில்…
தம்பியில்…
தமையனில்…
தொங்கித் தொங்கியே
சுமையானவளை
ஊர் உறவுகள் கூடி
குடும்பத்தில் காய்ந்து கருவாடாக
மஞ்சள் கையிற்றில் தூக்கிலிட்டனர்
சாகும் வரையும்
தூங்கும் அக்கயிற்றில்
தூங்கத் தொடங்கிவிட்டாள்
அவள் மகளும்.
நோர்வே நக்கீரா 27.04.2015

 

Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

சுருட்டு (உண்மைக்கவிதை) நோர்வே

padilla
சுருட்டு
புகையற்ற குகைவண்டி(subway)!!!
கனேடிய சோசல்நிலையம் போல்
ஒரே நெரிசல்
ஐம்புலன்களையும் அடக்கி
ஆத்மதரிசம் கொடுக்கும் ஆலயமாக
கைபேசிகள்……
தியானப்பயணங்கள்
தொடரும்…..!
அருகிருக்கை வெறுத்து
சீறியெழுந்தாள் சீனத்தி ஒருத்தி
60 தாண்டிய ஈழத்து அப்பு
என்ன செய்தார் த(வ)ப்பு?
சுருட்டுக் கொட்டிலில் சுருட்டி
கோவணத்தை எறிந்துவிட்டு
புட்டுக்குழல் மாட்டிய அப்பு
வண்டிக்குள் சிப்பைத் திறந்து
சுருட்டுத் தேடுகிறார்.
என்தொலைபே(வே)சியின் கண்ணும்
அவர் சுருட்டை
சுடச்சுடத் தேடியது.
சுருட்டை சுருட்டி மடித்து
வைத்தாலும்
நாளை அப்புவின் சுருட்டு
இன்ரநெட்டில் விற்பனைக்கு வரும்
நோர்வே நக்கீரா 22.03.2015
Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

தாயர்தினம் 08.02.2015 நோர்வே நக்கீரா

இன்று நோர்வேயில் தாயர் தினம் கொண்டாடப்பட்டது. இதனுடைய தாக்கம் ஒரு கவிதையாக இங்கே

தாயர்தினம் 08.02.2015 நோர்வே நக்கீரா

மனதில் தாயர்தினத்தை காயாது
காத்து வைத்திருக்கிறார்கள் ஈரமாக
தாயை….?

இதயத்திலும் உதரத்திலும் சுமந்தவளை
மனதில் நினைப்பதற்கு ஒருநாள்….
ஒருநாள் மட்டும்…!

ஒருநாளாவது இருக்கிறதே!!!
மகிழ்ச்சி தான்

முதியோர் இல்லத்தில் தாயரின்
படுக்கையைச்சுற்றி
பிள்ளைகளின் அனுப்பிய பூக்கள்.
இங்கே சாவீட்டுக்கும் பூக்கள்தான்

பணத்தின் பின்னால்
பிணங்களாக பிள்ளைகள்
யாரோ பெத்ததுகள் தாய்க்கு
பாலூட்டுகிறார்கள் பணத்துக்காய்.
பணத்துக்குப் பிறந்தவர்களா ……..?

நாளை வாடப்போகும் மலர்களுக்குள்
வாடாமலராய் தாய்

சுவரைச் சுறண்டியது தாய்பார்வை
ஒற்றை ஆணியில்
இன்றோ நாளையோ என
தொங்கிக்கொண்டிருந்தது
தாயின் மகிழ்ச்சி
குடும்பப்படமாக

புகைப்படத்தில் பின்னால்
ஊசலாடிக்கொண்டிருந்தது நம்பிக்கை
வழியனுப்பவாவது வரவார்கள்
என்ற நம்பிக்கையில்
கண்ணை மூடிக்கொள்கிறது தாய்மை

நோர்வே நக்கீரா 08.02.2015

நோர்வே நக்கீரா's photo.
Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

து-வேசம் (துவேசம்)   நோர்வே நக்கீரா 30.01.2015

து-வேசம் (துவேசம்)   நோர்வே நக்கீரா 30.01.2015

துருவத்தில்

தூங்கிக் கொண்டிருந்தது துயரம்–நோர்வே

நிரம்பிக் கொண்டிருக்கும்

ஊருந்தும் பேருந்தில் (பஸ்)

நிரம்பாமலே பெருமூச்சு விடும்

கரியாசனமான

என் அருகாசனம் அரியாசனமாய்

விண்ணுலக விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு

கழுத்தில் தொங்கும் சிலுவையும் கையுமாய்

விழுந்து விழுந்து நிற்கிறார்கள்

வாழ்வே விழப்போகும்

பலவெள்ளைக் கிழடுகள்.

என்தோழ்பை தொணதொணத்தது

“உன்மனம்போல் கொதிக்கிதடா மடி

கிழடி கூட அருகிருக்கமாட்டாள்

என்னையாவது உன்னருகிருத்து”

ஒருபயணச்சீட்டில்

இரு இருக்கையில்

இருவர் பயணம் செய்கிறோம்.

தோழ்பை

இப்போ தொங்க மறுக்கிறது.

இறங்கிப்போகும் போது

ஒரு கிழவியின் காதில் நான்

“நீ வணங்கும் யேசுவும் கறுப்பன்தான்”

முறைத்துப் பார்த்தபடி

விறைத்துப்போய் நின்றாள்

விண்ணுலக விசாவை இரத்து செய்வாளா?- இனி

நரகம்தான் இவர்களுக்கு சொர்க்கம்

(இதை பலர் ஐரோப்பாவில் அனுபவித்திருப்பர்)

Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

மலையகமக்களின் நினைவுடன் புத்தாண்டு நோர்வே நக்கீரா

புதிது புதிதாய் ஆண்டுகள்- பல
வந்து வந்து போயின
எமது ஈழத்தமிழர்க்கு -என்ன
புதிதாய் ஆயின?

உலகிற்கு உதிரத்தை தேநீராய்
தந்தான் மலையத்தான்
சரிந்து மண்ணில் சிதைந்தபோது
உலத்தான் என்ன கொடுத்தான்?

அழுதகண்ணீர் வடிந்து
உலர்ந்து உப்பாய் போகுமுன்- எப்படி
தொழுது மகிழ்வை கேட்கிறாய்
புதைந்த ஆண்டே கூறுமுன்.

பத்தாண்டுச் சுனாமியை நினைத்து இப்போ அழுதோம்
புத்தாண்டில் மகிழ்வை எப்படி உன்னுடன் பகிர்வோம்.
சுனாமியாய் தின்றாய் அன்றும் வடவன்னித்தமிழனை
மண்சரித்துக் கொன்றாய் இன்றும் மலையகத்தமிழனை

தமிழனைத் தீர்த்துவிட்டு தரணியாளும் நோக்கமா?
செய்தவினை அத்தனையும் சேர்ந்துவரும் ஊக்கமாய்

இயற்கையே நீ என்ன இயக்கர்களின் பக்கமா?
அரக்கர்களுடன் வாழ்வது உனக்கு இன்பச்சொர்க்கமா?

தமிழனை தின்று தின்றே கொழுத்தாய்
எம்மை என்றும் தேடித்தேடியே அழித்தாய்
நம்பி நம்பியே நாம் இன்றுவரை கெட்டோம்
தன்நம்பிக்கையோடு புதுவுலகு படைப்போம்

வந்தவழி பார்த்து திரும்பி நீயும் போய்விடு – நாம்
சொந்தவழி கண்டபின் வந்து முகத்தைக் காட்டிடு

Posted in கட்டுரை | பின்னூட்டமொன்றை இடுக

யேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி) : நோர்வே நக்கீரா

Jul og nyttår 2014

உலகம் முழுவதும் யேசு கிறீஸ்துவின் பிறந்தநாள் மார்கழி 24இரவு சாதி மத இனவேறுபாடின்றி கொண்டாடப்படுவதை காண்கிறோம். இதற்கு யேசுவின் பிறந்ததினம் மட்டும்தான் காரணமா? மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா? மதங்கள் பல கலாசார, ஐதீக, வேற்று நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்புக் கொண்டதாகவே உள்ளன. உ.ம். அரசையே துறந்த புத்தரின் பௌத்தம் அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் ஆக்கிரமிப்பெற்றது விரிவுபடுத்தப்பட்டது.

மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை என்று மார்கழிக்குளிரை பெண்ணுக்கு வர்ணித்தான் கவிஞன். ஆனால் பொதுவாக மார்கழி பீடைமாதம் என்கிறது இந்துமத சாத்திரமுறைகளும், நோடன்மித்துக்களும், ஐரோப்பிய வாழ்க்கை அனுபவமும். இதற்கு வாழ்வியலுடன் தொடர்புள்ள காலநிலையே காரணமாகிறது. ஐரோப்பிய, வடதுருவநாடுகளின் அதன் மித்துக்கதைகள் மார்கழியை நோய்கள், சாக்கள், நிறைந்த துர்மாதமாகவே காண்கிறன. சாதாரணமாக ஐரோப்பாவில் இம்மாதம் இருள், குளிர், நோய்கள், சலிப்பு, பிடிப்பின்மை, தற்கொலைகள் நிறைந்தமாதமாகவே இன்றும் இருந்து வருகிறது. அத்துடன் சூரியனைக்காணாத துருவநாடுகளில் சோர்வும் அசதித்தன்மையும் விருப்பற்ற, வெறுப்புடைய நாட்களாகக் கழிவதையே காணமுடிகிறது.

முக்கியமாக வடதுருவத்து நோர்வே போன்ற ஸ்கன்டிநேவிய நாடுகளில் யேசுவின் பிறப்பிற்கு முன்னரே மார்கழி 22முதல் 25வரையான நாட்கள் விமர்சையாக முக்கிய நாட்களாகக் கொண்டாடப்பட்டு வந்தன. அன்று இந்நாடுகள் விவசாயம், கடல்தொழில் கடற்கொள்ளையே வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நிர்ணயித்தது. இந்த நிலம்சார் வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள் ஒருவிதமாகவும், கடல்சார் வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள் இன்னொரு விதமாகவும் மார்கழி 24 இரவைக் கொண்டாடுவார்கள்.

இந்த மார்கழி 24 இரவில் அப்படி என்ன அதிசயம் உள்ளது? இருள்சூழ்ந்த பீடை மாதம், கறுப்புசக்திகள் (பேய் பிசாசு சூனியம் ..)வீரியம் கொள்ளும் மாதம், விவசாயமே கடற்தொழிலே குற்றியபோகம், குளிர், நோய், நொடி அதிகரித்திருக்கும் மாதத்தில் என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? மார்கழி 24 இரவு பூமியானது ஒளியை நோக்கித் திருப்புவதாக அவர்கள் கணித்தார்கள். இந்நாளில் இருந்து பூமியில் ஒளி அதிகரித்துக் கொண்டே வரும். இதை வின்ரர் சூல் வர்வ் (குளிர்காலச்சூரிய சங்கிராந்தி) என்று நோர்வேயிய மொழியில் கூறுவார்கள். இதே போலவே ஆனி (யூன் 23) இல் இருந்து சூரியஒளி மங்கத்தொடங்கும். இதை “சந்தான்ஸ்”(நடுக்கோடை ஈவ்) என்பர். சுருங்கச் சொல்லின் அதி இருள்கூடிய நாள் மார்கழி 23 இரவாகவும். அதிஒளி கூடிய நாள் ஆனி 23 ஆகவும் இருப்பதை விஞ்ஞானம் இன்று ஒத்துக்கொள்கிறது.

அதியிருள் கூடிய நாளான மார்கழியில் 22-24 தொழில்கள் நிறுத்தப்பட்டு, பாண் கேக்போன்ற பதனிகள் செய்வதும் நிறுத்தப்பட்டு, கிராமத்தவர்கள் ஊர்தலைவரின் தலைமையின் ஒன்று கூடி வீடுவீடாக பாடல்களைப் பாடிச் சென்று வீட்டுகளை கறுப்புச்சக்திகளில் இருந்து காத்துக் காவல்படுத்துவார்கள். அதன்பின் கதவுகளில் சக எனும் அடையானத்தை இட்டுவிட்டு காவல்படுத்தவிட்டு அந்தவீட்டிலிருந்தோ, வீட்டாருடனோ வெள்ளிக்காசை எடுத்துவருவார்கள். இது ஊரில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கரோல் போவதையும் வீடு வீடாக அரசி மரக்கறி சேர்த்து கோவிலில் அன்னதானம் கொடுப்பதை நினைவுபடுத்தலாம். இப்படி ஊர் ஊராக பாடிச்சென்று வீடுகளை கறுப்புச்சக்திகளிடம் இருந்து காத்தபின் எடுத்துவரும் வெள்ளிக்காசுகளை ஊருக்கு வெளியே உள்ள பாழும் கிணற்றில் வீசி எறிந்துவிட்டு திருப்பிக்பார்க்காது வந்து குறிப்பிட்ட விழா ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் ஒன்று கூடுவார்கள்.

star topமரணச்சடங்கில் பிணத்துக்குக் கொள்ளிவைத்தபின் திரும்பிப்பார்க்காது போவதை இங்கே நினைவு கூரலாம். இது எமது நாட்டில் திருவெம்பாவையையும் நினைவுபடுத்தியது. மார்கழிக்குளிரில் திருவெம்பாவை பாடிக்கொண்டு இளைஞர்கள் மக்களை எழுப்பிக் கொண்டு போவது போன்ற நிகழ்வு நினைவுக்கு வரும். ஆதிமனிதனின் சிந்தனைகள் ஏறக்குறைய ஒரேமாதிரியாகவே இருந்திருக்கின்றன. கிறீஸ்தவம் நோர்வேயுள்; நுளைவதற்கு முன்னர் மக்கள் இயற்கையையே வணங்கினார்கள். தமக்கு மீறிய சக்திகளைக் கடவுளாகத் தொழுதார்கள். ஒருமனிதனையோ ஆவியையோ கடவுளாக எண்ணவில்லை. சூரியன், இடி, மின்னல், வாயு, நீர், தீ போன்றவற்றை கடவுள் தன்மை கொண்டதாகக் கருதி வணங்கினார்கள் என்கிறது வடமித்துக்கள்.

இதன்பின் தீவளர்க்கப்படும், உணவுகள் சமைக்கப்படும், சூரியனை வரவேற்று, துதித்து,சமைத்த உணவுகளைப் படைத்து பிறக்கும் வருடத்தில் விளைச்சல் அதிகரிக்க வேண்டிப் பிரார்த்தித்த பின் படைத்த உணவுகள் பரிமாறப்படும். அதன் பின்னரே குடியும் கூத்தும் கும்மாளமுமாக தொடங்கும்;. எமது நாட்டில் உளவர்திருநாளாம் தைப்பொங்கலை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நிலம்சார் மக்களின் குளிர்கால சூரியசங்கிராந்தியாக கொண்டாடப்பட்டு வந்தது. பொங்கலுக்கும் எமது விழாக்களுக்கும் வாழைமரம்போல் இங்கே கிறிஸ்மஸ்மரம் என்று நோர்வேயிய பெயரில் கிறான் திரே(யூலதிறே) என்று அழைக்கப்படும் மரம் முக்கியத்துவம் பெறும். காரணம் இந்தமரமானது நோர்வே, ஐரோப்பாவில் அதிகமாவே வளரும் என்பதற்காக அல்ல இந்தமரமானது கடும்குளிரிலும், பனியிலும் இலைகளை உதிர்காது பச்சைப்பசேர் என்று கறுப்புச்சக்திகளை எதிர்த்து நிற்கிறது என்று கருதினார்கள்.

இம்மரத்துக்கு பேய்கள், பிசாசுகள், பில்லி சூனியங்களை விரட்டும் தன்மை உள்ளது என்று நம்பினார்கள். இம்மரத்தை இன்றும் வீட்டுகளில் வைத்து சோடித்து, அழகுபடுத்தி அன்றுபோல் இன்றும் கொண்டாடுகிறார்கள்  இம்மரத்தில் இருந்த ஒரு நறுமணம் வந்து கொண்டிருக்கும். இந்தவாசனையும் கறுப்புச்சக்திகளை, சூனியத்தை விரட்டும் தன்மை கொண்டது என்று கருதினார்கள். அன்று இம்மரத்தை நடுவில்வைத்து ஊரே சேர்ந்து சுற்றி நின்று ஆடிப்பாடிக் கொண்டாடும். இன்றும் இம்மரத்தினை நடுவீட்டுள் வைத்து அதன் கீழ்தான் பரிசுப்பொருட்களை வைத்து நத்தாரன்று பரிசுப்பொருட்களை திறந்து பார்த்து மகிழ்வது வளக்கமாக இருக்கிறது. இது கலாசாரப்படிமமாக இன்றும் விளங்குகிறது. யேசுவின் பிறப்பிக்கு முன்னரே கிறிஸ்தவம் நோர்வேயினுள் நுளைவதற்கு முன்னரும் இந்தநாட்கள் கொண்டாடப்பட்டு வந்தது என்பதற்கான போதியளவு ஆதாரங்கள் உண்டு (மர்க்கடாகம் ஒக் கம்ல சிக்கர்- சிறப்பு நாட்களும் பழைய ஐதீகமும்)

கடல்சார் வாழ்வியலைக் கொண்டவர்கள் இந்த ஒளிதிரும்பும் சூரியச்சங்கிராந்தியை வேறுவிதமாகக் கொண்டாடுவார்கள். விஞ்ஞானம் இன்றுபோல் வளர்ச்சியடையாக காலத்தில் கூட நட்சத்திரங்களின் திசையை வைத்து நாட்களைக் கணிப்பார்கள். உலகில் எந்தப்பகுதியில் இருந்தாலும், கடலில் எங்கு நின்றாலும் சரியாக மார்கழி 24ல் தம்குடும்பத்துடன் ஒன்றிணைவதற்காக வந்துவிடுவார்கள். மனைவி- மனைவியர், சிறுபிள்ளைகளின் கணவன்;, தந்தை, சகோதரங்களின் வருகைக்காக் காத்திருப்பார்கள்.

நோர்வே போன்ற நாடுகள் வீக்கிங்களை (கடற்கொள்ளையர்) கொண்டநாடுகள் ஆகும். இவர்கள் தாம் கொள்ளையிட்ட பொருள் பண்டங்களுடன் வந்திறங்குவார்கள். முழுக்கும்பமுமே குதூகலிக்கும். இன்றும் நோர்வேயியர்கள் எங்கிருந்தாலும் அன்றுபோல் இன்றும் பரிசுப்பொருட்களுடன் தமது சொந்த ஊருக்குப் போவார்கள். 5குரோன் பொருளை 50குரோன் கொடுத்து வாங்கியனுப்புவார்கள். இந்தநாள் பெரும்பான்மையினர் தத்தம் குடும்பங்களுடனேயே தேவாலயங்களுக்குச் செல்லாது கொண்டாடுவது இவர்களின் கலாசாரமரபைக்காட்டி நிற்கிறது. நோர்வேயில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் பெற்றோரின் அனுமதியின்றி தேவாலயங்களில் பதியப்படுகிறது. சிலர் அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள் காரணம் தாழ்ப்பதற்கு இடம்தேவை என்பதால். ஆனால் இங்கே கிறீஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவே. இந்த நத்தார் என்பது நோர்வேயியர்களால் ஒரு கலாசாரவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

சரியாக மார்கழி 22ம்திகதி பூமி ஒளியைநோக்கித் திரும்பும் 24ம்திகதி இரவே முழுமையாகத் திரும்பியிருக்கும் இந்த நாளன்று கடல்தொழில் செய்வோர், கடற்கொள்ளையர் கடற்கரைக்குச் சென்று  தமது கப்பலில் மேல் குதிரைகளை நிறுத்தி அவற்றை வெட்டி இரத்தத்தால் தம்வள்ளங்களைக் கழுவி தீயசக்திகளை கலைப்பார்கள். கறுப்பு தீயசக்திகளுக்கு குதிரையைப்பலியிடுவதால் கறுப்புத்தீய சக்திகள் திருப்தியடைந்து வீரியம்குன்றி சாந்தியடைந்து அடங்குவதுடன் குதிரையின் இரத்தத்தால் கழுவும்போது வள்ளம் துப்பரவாகிறது என்று நம்பினார்கள். இதை நோவேயிய மொழியில் “புலூத்” என்பார்கள். பழையதீயவற்றை அகற்றி புதிதாக வரும் சூரியனை வரவேற்றுக் கொண்டாடுவார்கள். எதிகொள்ளும் வருடம் நன்மைகள் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திப்பார்கள்.

வள்ளத்தில் குதிரைகளை வெட்டிக் கிரியைகள் முடிந்ததும் அண்டிய பக்கங்களில் தீ வளர்க்கப்பட்டு வெட்டிய குதிரை இறைச்சி உணவுக்காய் தயாராகும். ஊரில் வேள்விக்குப் பின் வெட்டிய ஆடுகளைப் பங்குபோடுவதை நினைவு படுத்திக் கொள்ளலாம். அதேபோல் சாமிக்குப்படைத்த உணவை பகிர்ந்துண்பதையும் எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். பெண்கள் சமையலுக்கான அடுக்குகளையும், சமையலையும் பார்த்துக் கொள்வார்கள். ஆண்கள் வள்ளங்களில் மதுவும் போதையுமாக இருப்பார்கள். இக்காலங்களில் தான் காதலும் கைகோர்க்கும் காலமாக இருக்கும்;. பலஆண்டுகள் மாதங்கள் கழித்து வீட்டுக்கு வரும் ஆண்களுக்கு உணவைத்தவிர மற்றைய உணவுகளும் அக்கம் பக்கங்களில் இரகசியமாகத் தயாராகும். இது இயற்கையின் நியதியே.

காதல், திருமண ஒழுங்குகள், என்பன இவ்விழாநாளின் தொடர்ச்சியாகவும் இருக்கும். எமது நாட்டவரின் பண்பாடுபோலவே பெண்கள் அனேகமாக தாயுடன், வீட்டில் இருந்தே தொழில்புரிவார்கள். தோட்டத்தொழியின் குடும்பமே கூடி உறவினர் நண்பர்கள் கூடி உழைப்பார்கள். இக்காலங்களில் அதிகமாக பெண்கள் தனித்து வீட்டுவேலைகளைக் கவனிப்பதால் வெளித்தொடர்புகள் குறைவாகவே இருந்தது. இந்த ஒளிதிரும்புநாட்களில் ஊரில் மக்கள் நடமாட்டமும், தொடர்புகளும், உறவுகளின் வருகையும் அதிகரித்திருக்கும். இக்காலத்தில் கூடுதலாக எத்தொழிலும் செய்வதற்கு உசிதமான காலநிலை இருக்காது.

இக்காலங்களில் திருமணமாகா குமர்பிள்ளைகள் உள்ளவீடுகளின் கூரையில் இருந்து நீண்டநூல் தொங்கவிடப்பட்டிருக்கும். அதன் அர்த்தம் இந்தவீட்டில் ஒரு குமரிப்பெண் இருக்கிறாள் அவள் திருமணமகாகக் காத்திருக்கிறாள் என்பதாகும். அவ்வளியால் போகும் இளைஞர்கள் அவள் யார்? குடும்பம் எப்படியானது? பெண் எப்படிப்பட்டவள்? என்பதை ஊரில் விசாரித்து அறிவார்கள். இக்காலத்தில்தான் எல்லோரும் ஊருக்கு வந்த கூடியிருப்பார்களே. போதிய அளவு நேரகாலமும் இருக்குமே. கடலில், வெளியிடங்களின் வேலை செய்து ஊர்வந்தவர்களுக்கு ஊரில் உள்ளவர்களை அதிகம் தெரியாது இருப்பதற்கு இடமுண்டல்லவா.

ஊரில் விசாரித்து பெண்ணைப் பிடித்துக்கொண்டால் அந்த இளைஞன் அந்நூலை வெளியே நின்று இழுப்பான். அதை அவளும் பெற்றோரும் அறிந்து கொண்டபின் அவனை உள்ளே அழைந்த்து விசாரித்து குலம் கோத்திரம் பிடித்துக் கொண்டால் குடும்பங்கள் கூடி திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பார்கள். இதை தமிழர்கள் நாம்; பேசிச் செய்யும் திருமணங்களுக்கு ஒப்பிடலாம்.

மனிதர்களின் வாழ்க்கைமுறைகள், ஐதீகங்கள், மரபுகள், பண்பாட்டுப் பழக்க வளக்குகள் என்பன ஏறக்குறைய எங்கும் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன. வளங்கள், பொருளாதாரம், காலநிலைகளுக்கேற்ப மாற்றங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கி றது. இயற்கையுடன் மனிதன் அன்று ஒன்றியே வாழ்திருக்கிறான் என்ன உண்மை புலனாகிறது. இன்று இயற்கையை விட்டு மனிதன் வெகுதொலைவில் தொலைந்து போய்விட்டான்.

கிறிஸ்தவம் நோர்வேய் போன்ற நாடுகளில் உள்நுளையும்போது பல எதிர்ப்புக்களை எதிர்கொண்டது. சிலபழக்கவளங்கங்களை முற்றாக முறிக்கமுடியாதநிலை ஏற்பட்டதால் அவற்றை கிறிஸ்தவத்தின் ஒருபகுதியாக ஏற்று மக்களை மதம் முழுமையாக விழுங்கிக்கொண்டது. உ.ம்: பொட்டு, தாலி என்பன இந்து மதத்தின் சின்னங்களாக இருந்தபோதும் கத்தோலிக்கர்கள் இதைப் பயன்படுத்துவார்கள். காரணம் மக்களின் ஆழமான பழக்கவளங்கங்களை மறுத்து மதமாற்றம் செய்வது கடினமானது என்பதால். இந்த ஆக்கிரமிப்பானது அரசர்களினூடாவே உள்நுளைந்தது. இதன் முதன்மையானவர் அரசனான ஊலாவ் தென் கெல்லிய (புனித ஊலாவ்) ஆவார். இவருடைய கிறிஸ்தவதேவாலயம் இன்றும் நடுநோர்வேயான துரொண்கெய்மில் உள்ளது. இவர் கிறீஸ்த்தவத்தை நோர்வேயினுள் கொண்டுவரும் போது புனிதப்போரைப் பிரகடனப்படுத்தினார்.

ஒருகையில் சிலுவையும் மறுகையில் வாழுமாக புனிதப்போர் தொடர்ந்தது. இதை இந்தியாவில் முகலாயர்கள் ஒருகையில் குரானும் மறுகையில் வாழுடனும் வீடுவீடாக வந்து மதம்மாற்றி கொலைசெய்ததை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். கிறிஸ்தவத்துக்காக உயிர் விடுபவன் நேரடிமோட்சத்தைப் பெறுகிறான் என்றும் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களாக மாறாதவர்களுக்கு பாடசாலை செல்லும் உரிமை மறுக்கப்பட்டது. தொழிலுரிமை நிராகரிக்கப்பட்டது. கத்தோலிக்கர்களாக இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களைக் கொன்றவர்கள் நாயகர்களாக கொண்டாடப்பட்டார்கள்.

அன்பையும் மனிதநேயத்தையும் காதலையும் வலியுறுத்திய யேசுபெருமானின் பெயரில் இரத்தாறுகள் ஓடியன. புனிதம் என்ற பெயரில் சித்திரவதைகள், கொலைகள் கூத்தாடின. கலாசார பண்பாட்டு விழுமியங்கள் முழுமையாக விழுங்கப்பட்டன. அரசுகள் கூட மதத்தின் கால்களில் மண்டியிட்டுக் கிடந்தன. புனிதப்போர் என்பது இன்று இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியதாக கருதப்படுவது மிகத்தவறானது.

இஸ்லாமியர்கள் புனிதப்போர் (ஜீகாத்) என்று போர்கொடி தூக்கியபோது அமெரிக்க யோய் புஸ் கூறியது நினைவுக்கு வருகிறது “அமெரிக்காவை கடவுள் காப்பாற்றுவாராக இந்தசிலுவைப்போர் தொடரும் என்றார். இஸ்லாமியர்கள் ஐரோப்பா நோக்கி படையெடுத்து துர்கியா ஊடாக ஸ்பெயின்வரை ஊடுருவியபோது சிலுவைப்போரால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இங்கே விரல்காட்டி விமர்சிப்பதற்கு யாரும் புனிதர்களும் அல்ல மதங்கள் எதுவும் புனிதத்துவம் கொண்;டதும் அல்ல. அனைத்து மதங்களின் பெயராலும் மனிதம் நசுக்கப்பட்டே வந்திருக்கிறது. அன்றைய இயற்கை நம்பிக்கைகளை விட எந்தமதமும் புதிதாக எதையும் கூறிவிடவில்லை. இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் இயற்கையை இயன்றவரை காப்போம். இயற்கை எம்மியற்க்கை ஆகட்டும்.

நோர்வே நக்கீரா 24.12.2014

நோபல்பரிசு 2014 குழந்தைகளின் உரிமைக்காகவா? : நோர்வே நக்கீரா

nobel

பேரழிவுக்கு வித்தாக இருக்கும் டைனமெட்டைக் கண்டுபிடித்த சுவீடனைச் சேர்ந்த அல்பிரட் நோபலின் பிறந்த தினத்தன்று, 10 மார்கழியில் அமைதிக்கான நோபல்பரிசு நோர்வேயில் வளங்கப்பட்டு வருகிறது. நோர்வே அன்று முதல் இன்று வரை அமைதியை விரும்பும் அமைதிக்காகப் பணிபுரியும் நாடு எனக்கருதியதால் அமைதிப்பரிசை நோர்வே கொடுக்கவேண்டும் என்பது அல்பிரட் நோபலில் விருப்பாக இருந்தது. இந்த நோபல் பரிசானது 1901ல் இருந்து தொடர்ச்சியாக நோர்வேயில் இருந்தே வளங்கப்பட்டு வருகிறது.

2014க்கான அமைதிப்பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ; சத்தியாதிக்கும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய்கும் வளங்கப்படுகிறது. இருவரும் நேற்று ஒஸ்லோ விமானநிலையத்தை வந்தடைந்தார்கள். இம்முறை நோபல்பரிசானது குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியவர்களுக்கு மொத்தம் 278 பேரில் இருவருக்கு வளங்கப்படுகிறது. இந்த நோபல்பரிசு வழங்கும் நிகழ்வில் 6000 குழற்தைகள் பங்கு பற்ற உள்ளார்கள். இப்பரிசுக்கான 16கரட் தங்கப்பதக்கமும் பெரும்தொகை பணமும் காத்துக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் மத்தியபிரதேசமான விதிஷh மாவட்டத்தில் 11.01.1954ல் பிறந்த கைலாஷ; சத்தியார்த்தி ஒரு பொறியில்துறையில் முதுமானி பட்டம் பெற்றவர். 25வருடங்களுக்கு மேலாக குழந்தைகளின் உரிமைக்காக திட்டமிட்டு, அமைப்புரீதியாக வரையறுத்து செயற்பட்டு வந்துள்ளார். முக்கியமாக குழந்தைத் தொழிலாளர் பிரச்சனைகளை முடிவுகட்ட ஏழ்மை, கல்வியறிவின்மை, வேலையில்லாப்பிரச்சனை, மக்கள் தொகைப்பெருக்கம், சமூக உள்வெளி கட்டமைப்புக்களின் சீர்கேடுகள், கல்வி வளங்காமை போன்ற பிரச்சனைகளுக்கு எதிராகவும் போராடிவந்தார். முக்கியமாக இவர் குழற்தைத்தொழிலாளர் ஒழிப்பில் 80000க்கு அதிகமான பிள்ளைகளை பாதுகாத்து கல்வியறிவு கொடுப்பதற்காகப் போராடி வெற்றியும் கண்டுள்ளார்.

மலாலா யூசப்சாய் இவர் 12.07.1997ல் பாக்கிஸ்தானில் பிறந்த 17வயதுடைய சிறுமியாவர். இவர் தலிபான் எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சாவின் விழிம்பை எட்டித்தொட்டவர். இவரை மேற்குலகின் உதவியுடன் காப்பாற்றினார்கள். இவர் இஸ்லாத்தில் பெண்களின் கல்வி குறித்துப்போராடி வந்துள்ளார். இதற்கு அவரின் தந்தை ஜியாவுதீன் யூசப்சாய் இன் தாக்கமும் அதிகம் இருந்தது. இவர் தந்தையின் பாடசாலையில் படித்துவரும் வேளை பிபிசியில் பேசும் வாய்புக்கிடைத்தது. அங்கே பெண்கள் கல்வி பற்றிப்பேசிய உரை பெருவரவேற்பைப் பெற்றதால் தலிபான்களால் கொலைமிரட்டல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டது. இவர் பள்ளிப் பேருந்துவில் சென்று கொண்டிருந்தபோது சரமாரியாக தலிபான்களால் சுடப்பட்டு காயமுற்று ஐரோப்பா கொண்டுவரப்பட்டு உயிர்பிழைத்தார். இவர் இலண்டனிலுள்ள பேமிங்காம்பில் தனது படிப்பைத்தொடரும் வேளையும் தனது போராட்டத்தை பெண்கள் கல்விக்காக முன்னையதைவிட மூச்சாக ஈடுபட்டார்.இன்று நோபல்பரிசு பெற்றவர்களில் மிகக்குறைந்த வயதுடையவர் மலாலா ஆவார்.

இவர் விமானநிலையத்தால் அழைத்துவரப்படும்போது அவர் கூறினார் நான் ஒருமுஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் இஸ்லாத்தில் கல்வி என்பது உரிமையல்ல கடமையாக வேண்டும் என்றார்.

சத்தியாதியும், மலாலாவும் அமர்ந்திருந்த கூட்டத்தில் சத்தியாதி மலாலாவைக் கேட்டார் ‘எனக்கு மகளாக வருகிறாயா’ என்று. அதற்கு அவளும் சம்மதித்தாள் இதேவேள்வியை நோபல்குழு தலைவர் யாகலாண்டிடம் கேட்டபோது ‘ நீ அவளை உன்மகளாக ஏற்பாயா’ அவர் அழித்தபதில் ஆச்சரியமாக இருந்தது. ‘ ‘அது உணர்வு சம்பந்தமானது, நோபல்பரிசு அவர்களின் செயற்பாட்டுக்குக் கொடுக்கப்படுகிறது’ என்றுசமாளித்தே பதில் அளித்தார். இங்கேதான் இந்த கீழத்தேய சத்தியார்த்தியையும் மேற்கத்தைய யாகலாட்டையும் ஒரேதராசில் நிறுத்திப்பார்க்க நேர்ந்தது. மனத்தின் முடிவு சொன்னது ‘சத்தியார்த்தியின் செயற்பாடு உணர்வு பூர்வமானது’ யாகலாண்டின் செய்ற்பாடு கடமை பூர்வமானது. அதாவது ஒரு மிசினும் கடமைபூர்வமானதே என்ற எண்ணத்தை என்மனதில் நிறுத்தலாம்.

விமர்சனம்:-
பேரழிவாயுதங்களுக்கு ஆரம்ப கர்த்தாவான டைனமயிட்டைக் கண்டுபிடித்த அல்பிரட் நோபல் அமைதிப்பரிசுக்காக தன்பணத்தை ஒதுக்கி அதுவும் சுவீடனைச் சேர்ந்த ஒருவர் நோர்வேயை அமைதிப்பரிசை வளங்குமாறு பணித்தமை எதிரும் புதிருமான செயல்களே.

பொறியிலாளர் என்பவர் பொருட்கள், தளபாடங்கள் பற்றிய அறிவுடையவர். இப்படிப்பட்ட ஒரு மனிதர் சத்தியாதி குழந்தைகள், குழந்தைத்தொழிலாளிகளின் உரிமைக்காக தன்னை அர்ப்பணித்தார் என்பதும் எதிரும் புதிருமானதே. கீழத்தேய நாடுகளில் கல்வி என்பது தொழில், பணம், புகழ் சம்பாதிப்பதற்காகவே என்பதை இவரின் வாழ்க்கை சுட்டிக்காட்டுகிறது. கல்வியானது உணர்வு, ஆர்வம் என்பனவற்றில் அடிப்படையில் அமைந்தால் மட்டுமே கல்வி வாழ்வுடன் ஒன்றியமாக அமையும்.

மலாலாவுக்குக் கொடுக்கப்படும் நோபல்பரிசின் சமிஞ்சை என்ன? பெண்கள் கல்விக்காக போராடும் பலர் இருந்தபோதிலும் மலாலாவுக்கு எதற்கு இந்தப்பரிசு? முக்கியமாக இவர் தலிபான் எனும் இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக பேசினாள். அவர்களால் தாக்கப்பட்டாள். இந்த நோபல்பரிசானது இஸ்லாமிய தீவீரவாதிகளுக்கு விடும் எச்சரிக்கை சமிஞ்ஞையே ஆகும். நோபல்குழுத்தலைவர் தன்செவ்வியில் கூறினார் குழந்தைகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் கொடுக்கும் நம்பிக்கை என்றார். நோர்வே இந்த சமிஞ்ஞை நாளை இன்நாட்டில் இஸ்லாமியத் தீவீரவாதச் செயல்களுக்கு வித்திடும் என்பது உறுதி.

எதற்காக இப்பரிசு இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்டது? முரண்பாடுகளைக் கொண்டு இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாட்டவர்களுக்கும், முரண்பாடுடைய மதங்களைக் கொண்டவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம்தான் என்ன? முரண்பாடுகளைத் தாண்டி குழந்தைகளின் உரிமைக்காகப் உழைத்தவர்கள் என்பதற்காக இருக்கலாம். ஆனால் இப்படிபட்டவர்கள் பலர் உலகம் முழுவதும் உள்ளனர். இருந்தும் இவர்கள் இருவரும் ஐரோப்பாவுடன் அதிகம் தொடர்வுடையவர்கள் என்பதை யாரும் மறந்துவிடல் ஆகாது. சத்தியார்தியினதும் மலாலாவினதும் பிற்புலத்தைப் பார்த்தால் இது புரியும்.

இவை அனைத்தையும் மீறி நோர்வே அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையதா? என்ற கேள்வி மனதை இடறத்தான் செய்கிறது. உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிpவாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு. இதை வினையோகிக்கும் நோர்வே தன்படையையும் படைக்கலன்களையும் மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் நேட்டோவினூடாக நிலைநிறுத்தியுள்ளது. ஆயுதங்களையும் போரையும் கட்டிக்காக்கும் நோர்வே அமைதிப்பரிசை வளங்க உரித்தடையா?

அல்பெர்ட் நோபலில் இருந்து இன்றுவரையுள்ள அமைதிக்கான நோபல் பரிசில் எதிரும் புதிருமான நிகழ்வுகளையே காணலாம். நோபல்பரிசே எதிரும் புதிருமானதா?

நோர்வே நக்கீரா
10.12.2014

Posted in கட்டுரை | பின்னூட்டமொன்றை இடுக

அதிசயம்

அதிசயம்                           நோர்வே நக்கீரா 30.11.2014

ஒளியின்றிப் பார்த்தேன்
ஒசையின்றின் கேட்டேன்
உணவின்றி உண்டேன்
தொடுகையின்றி உணர்ந்தேன்
வாடகையின்றி வாழ்ந்தேன்
உயிருக்குள் உயிரானேன்
அதிசயம்கள் அனைத்தும்
தாயுள் மட்டும் தான்
தாயே அதிசயம் தான்

கருவறையுள் தான் கடவுள்
தாயெனும் கடவுளினுள் கருவறை
அதிசயங்கள் அனைத்தும்
தாயுள் மட்டும்தான்
தாயே அதிசயம் தான்

என்னைத் தொடாமல் தொட்டவளும்
பார்க்காமல் இரசித்தவளும்
இதயத்தால் தாளம் தட்டி
தூங்கவைத்தவளும்
என்னைத் தெரியமலே சுமந்து
சுகம் தந்தவளும் தாய1;…தாய்!!…தாய்!!!
இது தாய்மையின் அதிசயம்
தாயே அதிசயம்

நான் சுகமாகத் தூங்க
தூக்;கம் தொலைத்தவள்
அழாது இருக்க
அழுதழுதே வாழ்வைக்கழித்தவள்
பசியாதிருக்க
தான் பட்டிணி கிடந்தவளை
பசிக்க விட்டுவிட்டு
வெளிநாட்டில் இருந்து
நாய்தின்னாக் காசையே அனுப்பினேன்.

நான் நோயானபோது
தான் பத்தியம் காத்தாள்
விழுந்தபோது தாங்கிப்பிடித்தாள்
அடியெடுத்து வைக்க
தடிகொடுத்து நடந்தாள்.
அவள் தடிபிடித்து நாடக்க
தடி விடுத்து படிதாண்டி ஓடினேன்
காசுக்கோட்டை தேடி
வெளிநாட்டு வாழ்க்கை நாடி

அன்பாய் ஆசையாய் வாஞ்சையுடன்
தன்வயிற்றை தடவியபோதே
காலால் எட்டி உதைத்தவனிடம்
வேறு எதை எதிர்பார்ப்பாய் தாயே?

நீ இழுத்த மூச்சையே
இன்றுவரை சுவாதித்தேன்
மூச்சையாகிப்போனால்
யாரிடம் அதையாசிப்பேன்
அதிசயம் அனைத்தும்
தாயுள் மட்டும் தான்
தாயே நீ அதிசயம் தான்

Posted in கட்டுரை | பின்னூட்டமொன்றை இடுக

நன்றிக்கடன் –கவிதை

 

இக்கவிதைக்குக் கிடைத்து பதில் கவிதை.

உலகிலே உயர்ந்திடு என்றும்
( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் )

நற்றமிழ் வானில் நாளுமே சிறகடிக்கும்
சொற்றமிழ் வானம்பாடியே நக்கீரா – உந்தன்
சுந்தரத் தமிழ்கேட்டு சொக்கியே போனேன்
செந்தமிழில் பாடிடுவாய் சிறக்க

குருவியொடு மரமும் குரலினில் வருகையிலே
அருவியென தமிழ் கொட்டுதே – நீ
தமிழிலே பாடு தரணியுனைப் போற்றும்
பெருமை உனைச்சேரும் என்றும்

எழுதிய பாட்டை இப்படி தந்ததால்
எல்லோரும் ரசிப்பரே நண்பா – நீ
பழுதிலா லெழுதி பாராட்டைப் பெற்று
உலகிலே உயர்ந்திடு என்றும்

Posted in கவிதை | 1 பின்னூட்டம்

என்தாய்

என்தாய்

My mother

 

காலம் பூராய் தாதியாய்
சமையல்காரியாய்
கட்டில் பிணமாய்
அடுக்களைக்கும்
படுக்கையறைக்கும்
மரதநோட்டம் ஓடியப் பிள்ளைப்பெற்ற தாய்மெசின்
சேடம் இழுக்கும் போது கூட
வெளியில் போகும் அப்பாவைக் கூப்பிடுகிறது
‘தொப்பியப்பா
வெளியில் குளிர்”
குளிரோடி நான் உறைந்து போகிறேன்.

நோர்வே நக்கீரா (கனடாவில் 2014)

Posted in கட்டுரை | 2 பின்னூட்டங்கள்

கொலைகாரா…..! நோர்வே நக்கீரா 26.10.2014

கொலைகாரா…..!                            நோர்வே நக்கீரா 26.10.2014

MV5BMTQzMjM0MjI2NV5BMl5BanBnXkFtZTcwMDIxNjAyMQ@@._V1_SX214_AL_

நீண்டு நெளிந்து கிடக்கிறது
நெடிய நொடிய பாதை
திருத்தியமைக்க முன்வந்தவர்களைக்கூட
நீ அனுமதிப்பதில்லை

திரும்பிப்பார்
நிமிடத்துக்கு நீ செய்த கொலைகளை.
பிணங்களின் மேலேதான் பயணம் தொடர்கிறது.

உரிரத்திலேயே உருவாகிறது
உன் ஒவ்வொரு சுவடும்.

மறந்துவிடாதே
நிமிடத்துக்கு
நீ அளித்த மரணங்கள்
உன் மரணமாக
உனக்கு மரணசாசனம் எழுதப்படுகிறது
உன்னால் மரணித்த மரணமணிகள்
உன்னை மன்னிப்பதில்லை.

பாதைமேல் உரிமை கொண்டாடுகிறாய்
உயிலைத்திறந்து பார்
உன்னுயிர் கூட உனதல்ல

தலையுயர்த்தி
நெஞ்சு நிமிர்த்தி
வீறுடை போடலாம்
தடக்கி விழுவென்றே
கால்களுக்கடியில் காலம்
கல்லுவைத்திருக்கிறது.

நுண்ணிய வைரசையே
வெல்லமுடியாத உனக்கு
எதற்கடா வீராப்பு.

விதி நீயெரியத் திரிவைத்திரிக்கிறது
விதைத்ததை அறுக்க
வாழ்க்கையாப்பு
வைத்திருக்கிறது ஆப்பு

வெற்றியாளன் என
வீறுநடைபோடுகிறாய்
போ…போ..வேகமாய் போ!!
உச்ச நீதிமன்றில் உனக்காக
வழிமேல் விழிவைத்து
உயிலுடன் காத்திருக்கிறது
உன்மரணம்.

அணைத்து கொள்
அணைந்து கொள்

Posted in கவிதை | 2 பின்னூட்டங்கள்

களவுபோன…..?

களவுபோன…..?

நோர்வே நக்கீரா's photo.

ஊனை உருக்கி

உயிரை உறுத்தி

பேனாவினுள் ஊற்றி
புகழ் நாவால்
இதயத்தில் உயிர்த்தன
என்காதல் கவிதைகள்.

கனவு கற்பனைகள் சுமந்த
என்கவிதைகளின்
கரு-விதைகளே அவள்தான்.

பக்கம் பக்கமாய் புரட்டிப்பார்த்தாலும்
புதிரான புரியாத புதுக்கவிதைகளாய்

பொடிவைத்துப் பேசும் படிமங்களாய்
என்நெஞ்செல்லாம் நிறைவாள்
உடைமாற்றும் போது
இடைமாறும் கோலம்
என்காண்ணும் காட்சியே
வர்ண வாணம்கொள் ஜாலம்
வசந்தத்தின் குளிர்நிலவாய்
கவிதைவடிவங்களாய்
நானாக அவள்

பொட்டிட்டு பூவும் வைத்து
பட்டுச்சேலைகட்டி
நடந்து வந்தால் அவள் மரபு

சுள்ளென்று சுரிதாரில்
துள்ளிவந்தால் கள்ளி
வளமான வசனநடை

மொடேன் உடைபோட்டு
அங்கங்கே அங்கம்காட்ட
கிளித்துவிட்டுக் கிழுகிழுத்தால்
மத்தாப்பாய் புதுக்கவிதை

காட்டி மறைக்கும்
கட்டழகு கவர்ச்சிகாட்டி
காதல் கேட்டால்
பெண்ணியலின் படிமம்.

மென்மை கொண்ட
அட்டைப்படம் அவள் முகம்
நீண்ட நெடிய கூந்தல்
தாங்கி நிற்கும் நந்தவனமோ
தொகுப்பின் கவிதைவளம்
எல்லாமே அவளாய்
இல்லாளும் அவளாய்
இல்லாது போகாது
எண்ணத்தில் வாழந்தாலும்
வாழ்த்தவும் வழிகாட்டவும்
முன்னோடிகளை நாடி…தேடி…கூடி…?
பாடி….. கவிபாடி
பேரரசை…. கவிப்பேரரசை
புவியரசை….புவிசார் புகழரசை
அழைந்துவந்து
அணிந்துரை…வாழ்துரை
முன்னுரை…முகவுரை எனஅணிசேர்த்து
கவிதைகளிலும் அணிசேர்த்து
அணிகலனாய் பொருள் சேர்த்து
நாள்பார்த்து நாள்குறித்து
மாங்கல்யம் வாங்கி வந்து
தந்து நானே என
உறவுகளுக்கு திருமண அழைப்பனுப்ப
காதலியை அழைத்தபோது
கழுத்திலொரு மாங்கல்யத்துடன்
முடிவுரை எழுதிவந்தாள்
இன்னொருவனின் மனைவியாக
களவெடுக்கப்பட்ட என்கவிதைகளாக

என்கவிதைத் தொகுப்புப்போல்
கொஞ்சமேனும் ஈரமின்றி
என்நெஞ்சம் எரிந்தது
வாழ்த்தவா?
அணைக்கவா?
வாழ்த்தி அணைக்கவா?
தண்ணீர் தெளித்து…..?
அறுகரிசி போட்டு வாழ்த்தவா?
வாய்கரிசி போட்டு மீட்க்கவா?
நோர்வே நக்கீரா
01.06.2014

நோர்வே நக்கீரா's photo.
Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

ஆயுள்தண்டனை

ஆயுள்தண்டனை

untitled

” பெரியவள்….எடியே பெரியவள்…..கூப்பிடுறது கேக்கேல்லையே…..” என் அம்மம்மா

“என்னம்மா அவலமா கத்துறியள். என்ன இடியே விழுந்து போச்சு” என்னம்மா

“பின்னை இடிவிளாமல்…… உன்னை புரிசன் கொழும்பிலை இருந்து வந்தால் மாட்டிலை பால் குறையுது. இண்டைக்கு இதுக்கு ஒருமுடிவு எடுக்கவேணும்.”

“என்ன?… என்ரைமனிசன் பாலைக்கறந்து முழுவதையும் குடிக்கிறது போலை எல்லோ இருக்கு உங்கடை கதை”

“அப்ப எப்பபியடி பால் காணமல் போகுது. இதை நான் நேரை பாத்துப் போட்டு வந்துதான் உன்னோடை கதைக்கிறன்”

“அப்பிடி என்னத்தைக் கண்டியள்”

“இரவு ஏதோ சத்தம் கேட்குது என்று வெளியிலைபோய் பாத்தால் உன்ரை மனிசன் கண்டுகளை அவிழ்த்து விட்டு பாலைகுடிக்க விட்டுப்போட்டு போய் ஒண்டுக்கு இருந்துவிட்டு வந்து கண்டுகளைப் பிடிச்சுக்கட்டினதை என்ரை இரண்டு கண்ணாலையும் பாத்தனான்.”

அம்மம்மா ஆத்திரத்தில் பதறிக் கொண்டிருந்தார்

“சரி உன்ரை புரிசனைக் கூப்பிட்டு இல்லை எண்டு சொல்லச் சொல்லு பாப்பம். பால்ரீ இல்லை என்றார் அவருக்கு நாளே விடியாது. ஒருநாளைக்கு இரண்டு மணித்தியாலத்துக்கு ஒருக்கா பால்ரீ வேணும். கண்டு கள் பாலைக்குடிச்சா ரீக்கு எங்கையிருந்து பால்வாறதாம்”

“இஞ்சருங்கோ ஒருக்கா வந்து இந்தப்பிணக்கைத் தீத்துவிட்டுப்போங்கோ” அம்மா அப்பாவை அழைத்தார்

அப்பா எப்போதும் தியானம் செய்வதும் ஏதோ டாக்டர் பட்டம் பெறுவதற்கு படிப்பது போல் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதும் யாழ்பாணம் வந்தால் அவர் செய்யும் தொழில். அம்மாவின் குரல் கேட்டு

“ஏனப்பா கத்துகிறாய். மெதுவாய் கூப்பிட்டால் கேக்கும் தானே?”

“இராத்திரி நீங்கள் கன்றுகளை அவிழ்துப் பால்குடிக்க விட்டனீங்களே?”

“ஓம் அதுக்கென்ன”

அப்பா வந்ததும் பெட்டிப்பாம்பாய் அடங்கி மறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா திரும்பி அம்மாவை பார்த்தார் தான் சொன்னது சரிதானே என்பதுபோல்

“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? உங்களுக்கு 100தரம் பால்ரீ வேணும் பினேன் ரீ இறங்காது. பிள்ளைகளுக்கு பாலுக்கு எங்கை போறது.”

“நான் வேணும் என்றால் பால் குடிக்கிறதையும் பால்ரீ குடிக்கிறதையும் நிப்பாட்டுறன்”

“உங்களை யாரும் பால்குடிக்கிறதை நிப்பாட்டச் சொல்லவில்லை. ஏன் கன்றுகளை அவழ்த்துவிட்டீர்கள் என்று தான் கேக்கிறன்”

அம்மா அப்பாவிடையே வாக்குவாதம் ஏற்படும் போது கண்டும் காணாதது போல் அம்மம்மா அப்பப்பா அங்கிருந்து போய்விடுவார்கள். அதை அம்மம்மாவும் செய்தார்.

அப்பா தொடர்ந்தார்

“நான் சொல்லுறதைக் கொஞ்சம் கவனமாகக் கேள். பசுவினுடைய பால் அதன் கன்றுக்கொன்றே கடவுளாலை கொடுக்கப்பட்டது, சரி இயற்கையாலை கொடுக்கப்பட்டது எண்டு சொல்லன். அதை மனிதன் களவெடுத்துத்தான் குடிக்கிறான். இது முழுக்களவு. உன்ரை பாலை பக்கத்துவீட்டுப்பிள்ளைக்கு கறந்து கொடுத்தால் நீ அனுமதிப்பாயா”

“அது எப்படி முடியும். என்ன கடவுள் கடல் கணக்கிலா பால் தந்திருக்கிறார்”

“அப்பிடி வளிக்குவா. அதைமாதிரித்தான் இதுவும். கன்று குடித்த மிச்சம் தான் உங்களுக்கு. உங்களுடைய மிச்சப்பால் கன்றுக்கு இல்லை. எமக்காக வாழ்ந்து பயன்தரும் ஒரே ஒருயீவன் பசு. அது வாய்பேசாது எண்டதாலை நீங்கள் நினைச்சமாதிரி நடத்த ஏலாது. அதுக்கும் பிறப்புரிமையும் வாழ்வுரிமையும் உண்டு”

வாயடைத்துப் போனார் அம்மா. ஆனாலும் விட்டுக்கொடுக்க மனமில்லை.

“அப்ப பிள்ளைகளுக்கு பால் வேணுமே என்ன செய்கிறது? அப்ப நீங்கள் பால் குடிக்கிறதை நிப்பாட்டுகிறீர்களா?

“ஓம் அதைப்பிள்ளைகளுக்குக் கொடு. கன்று குடித்தமீதி தான் உங்களுக்கு”

பதிலை எதிர்பாக்காமல் போய்விடுகிறார்.அன்றில் இருந்து அப்பா பால்குடிப்பதே இல்லை

மூலையில் ஒருமேசையில் எட்டாம்வகுப்பு இறுதிப்பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த எனக்கு குபீர் என்று இருந்தது. அப்பாமேல் ஆத்திரமாக வந்தது. பாவம் அம்மா எமக்காக பாடுபடுகிறார். எங்களுக்கென்று அப்பா என்ன செய்தார்? இந்துசமயப் புத்தகங்களையும், தத்துவப்புத்தகங்களையும் படித்துவிட்டு தியானம் செய்வதும்தானே அவர் வேலை. தோட்டம் (கமம்) எங்குள்ளது என்பது கூட அவருக்குத் தெரியாது. கோழி மேச்சாலும் கேறுனல்லை (அரசாங்கம். கவுண்மென்ட்) மேய்க்க வேண்டும் என்பார். அவர் வந்ததோ விவசாய பெருவியாபாரி குடும்பத்திலை இருந்து. தோட்டம் என்றால் வெறுப்பு வேறு.

எனக்குப் பால் என்றால் உயிர். அதிலும் ஆடையை எடுத்து சப்புவதில் தனிப்பிரியம். இதிலும் மண்விழுந்திடுமோ என்ற ஏக்கம் தொட்டது. அம்மா அருகில் சென்று

“அப்பாவுக்கு பால்வேண்டாம் எண்டால் விடட்டும் எனக்குப் பால்வேணும் அம்மா”

அம்மா என்தலையைத்தடவிவிட்டு “பயப்படாதை உனக்கு என்றும் பால்கிடைக்கும்” என்று கூறி எழுந்து போய்விட்டார்.

அன்றிலிருந்து அப்பருக்கு வெறும் தேனீர்தான். பார்க்கப் பாவமாக இருந்தது. நான் அப்பாவின் முன் சீனிபோட்ட பாலை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக் கொள்வேன்

அடுத்தமுறை கொழும்பில் இருந்து அப்பா வந்தார். எனக்கென்று மாஸ்மலோஸ், அப்பிள், றம்புட்டான், மங்குஸ்தான் என்று ஒருதொகை இனிப்புப்பண்டங்கள் பண்டங்கள். இவற்றுக்காகவே அப்பா அடிக்கடி யாழ்பாணம் வரவேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பேன்.

இந்தமுறையும் வந்தார் அதே குதுகலம்தான். ஆனால் தேனீருக்குப் பால் இல்லை. பிளேன் ரீதான்.

அப்பாவந்து இரண்டாம் நாள் எமது கிளட்டு கேப்பை மாட்டை வாங்க ஒரு இஸ்லாமியன் வந்திருந்தான்.அம்மம்மா விலைபேசிக்கொண்டிரு க்கும் போது அம்மா கேப்பைச்சியை இழுந்து வந்தார். அதைக்கண்ட அப்பா ஓடிப்போய் அம்மா கையிலிருந்த மாட்டின் கயிற்றைப் பிடுங்கு எறிந்து விட்டார். மாடு வளவினுள் ஓடிமறைந்தது. ஆத்திரத்துடன் அப்பா நேரே மாடுவாங்கவந்தவனிடம்

“இங்சை மாடு ஒன்றும் விக்கிறதுக்கு இல்லை. நீ போகலாம்.”

அவனுக்கு என்செய்வான் பாவம். விழிபிதுங்க நின்று கொண்டிருந்தான். அம்மம்மா தலையாட்ட அவன் திருப்பிச் சென்றான். அம்மம்மா என்றுமே அப்பாவை எதிர்த்துப் பேசியது கிடையாது. எல்லோரும் இடத்தை விட்டு நகர்ந்தார்கள் எனக்கு மனதில் ஆணியடித்தது போல் ஒருவேதனை ஏன் அப்பா இப்படி நடந்து கொள்கிறார்? இந்த இந்துமதப்புத்தகங்களையும், தத்துவப்புத்தகங்களையும் வாசித்து வாசித்து கெட்டுப்போனார். இப்படிப் பார்த்தால் உலகத்திலை மனிதரே சீவிக்க இயலாது. எங்கடை தேவைக்குத் தானே மாடு வளர்க்கிறோம். அப்பாவின் நடவடிக்கை ஒன்றும் எனக்குச் சரியாப்புரியவில்லை. அம்மா அன்று யாருடனும் பேசவில்லை. இது எனக்கு மிகக் கஸ்டமாகவே இருந்து.

நான் அம்மாவையும் அழைத்துக் கொண்டு அப்பாவின் அறைக்குப் போனேன். அவர் டாக்டர் உதயமூர்த்தியின் “எண்ணங்கள்” என்ற தத்துவப்புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். இந்தப் புத்தகங் களும் இந்துமதமும் தான் அப்பாவைப் மாற்றி இருக்கின்றன என்று என்னுள் உறுமிக்கொண்டேன்.

“அப்பா நீங்கள் செய்கிறது ஒன்றும் எங்களுக்குச் சரியாகப்படேல்லை அப்பா. எதுக்காக மாட்டை விக்கவிடாமல் தடுத்தீர்கள்? எங்களுக்குக் காசு வேணும்தானே? உங்கடை சம்பளம் எங்களுக்குப் போதாது. அம்மா எங்களை வளக்கப்படுகிற கஸ்டம் உங்களுக்குத் தெரியாது. தோட்டம் துரவு என்று இருக்கிற படியாலை கொஞ்சம் கெளரவமா வாழ்கிறோம்.”

“இப்ப உனக்கு மாட்டை இறைச்சிக்கு விக்கவிடாதது பிரச்சனை. அப்பசரி முதலிலை உன்ரை அம்மாவை வில். அதுக்குப்பிறகு மாட்டை விற்கலாம்”

“என்னப்பா மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடுச்சுப் போட்டுப் பேசுகிறியள்”

“நீ எத்தனை வருசம் அம்மாவில் பால் குடித்தாய் அம்மாவைக் கேள்”

“ஒருவருசம்” இது அம்மா

“இப்ப உனக்குப் 14வயசு. மீதி 13வருசமும் யாரின் பால்குடித்து வளர்ந்தாய்? அம்மாவில் பால்வற்றி விட்டது என்று கொல்லுறத்துக்கு அம்மாவை விற்பாயா?”

பகீர் என்று இருந்தது. மொழியைத் தொலைத்துவிட்டு நிலத்தில் அம்மாவைப் போல் தேடிக்கொண்டிருந்தேன். விவாதிக்க முடியவில்லை. என்ன சொல்வது என்று தெரியாது தலைகுனிந்தேன்.

அப்பா தொடர்ந்தார். “இன்னும் சொல்லுறன் கேள். ஒருமனிதனுடைய உயிர்போகாது தவிக்கும் போதும் வாயிலூற்றுவது பசுவின் பால்தான். திருமணத்திலும் மாப்பிளை பொம்பிளை தலையில் பாலறுகு வைத்துத்தான் வாழ்த்தப்படுகிறார்கள். திருமணத்திலும் கோவில்களிலும் தீர்த்தமாகத் தரப்படுவது பசுவின் பால்தான். எமது கலாசாரத்தில் அனைத்து நல்நிகழ்சிகளிலும் பசுவின்பாலே பயன்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் கட்டையிலை ஏத்தமுன்னம் பிணத்தில் வாயில் ஊற்றுவதும் பசுவின் பால்தான். இந்துக்களின் வாழ்வில் மட்டுமில்லை உழவனின் வாழ்விலும் ஒன்றாகி, இன்றியமை யாது இருப்பது பசுவும் அதன் கன்று எருதுவும் தான். பிரதி உபகாரமாக நீங்கள் செய்வது என்ன? குடிக்குமட்டும் கன்றின் பாலைக் களவெடுத்துக் குடித்து விட்டு பால்வத்தியதும் அடிமாடாய் இறைச்சிக்கு வித்துவிட்டு சில்லறைக்தனமாக சில்லறையை எண்ணுகிறீர்கள். உங்களிடம் மனிதாபிமானம் தான் இல்லை என்றாலும் மிருக அபிமானமாவது இருக்கட்டும். போய் வேறு ஏதாவது வேலையைப் பாருங்கோ”

ஐயோ ஒரு பிரசங்கமே நடந்து முடிந்தது போல் இருந்தது. அம்மாவையும் அழைத்துக் கொண்டு அப்பாவின் அறையில் இருந்து வெளியே வந்தேன் ஞானம் பெற்ற புத்தனமாக. ஆம் அவர் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. செத்த மாட்டின் தோலை கூடவிடாது மேளமாக வாத்தியக் கருவிகளாக எம்காதுக்கு இனிய இசையாக்குகிறோம். நாம் என்ன செய்தோம்? எமதுமாடு என்று அடையா ளப்படுத்த கொதிக்கும் இரும்பால் குறிதான் சுடுகிறோம். அன்று என் அப்பா விதைத்த விதை செடியாக என்னுள் துளிர்விட ஆரம்பித்தது.

பிரசங்கத்தின் புழுக்கம் தாங்காது வெளியே போனேன் வளவினுள் நின்ற கேப்பைச்சி, இல்லை… இல்லை என்வளர்ப்புத்தாய் மோ மோ என்று கத்தியபடி ஒடிவந்து என்கையை நக்கிக்கொண்டாள். என் கண்கள் கண்ணீர் பனித்தன.மனிதன் எவ்வளவு கொடுமையானவன், சுயநலவாதி, அனைத்தையும் தனதாக்க எண்ணும் ஆதிக்கவாதி. அன்பைத்தவிர எந்தவிகாரம் மாட்டின் முகத்திலே மனதிலே இல்லை. மனச்சாட்சி என்னைத் தோண்டிக் கிளறிப் புடம்போட்டுக்கொண்டது. கொலை செய்வது மட்டும் குற்றம் அல்ல அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் இதயத்துடிப்பின் ஒவ்வொரு உதைப்பும் ஆயுள் தண்டனையாகவே இருந்தது.

நோர்வே நக்கீரா 27.07.2014

Posted in கட்டுரை | 12 பின்னூட்டங்கள்

உன்னை நேசிக்கும் உண்மைகள்

thinkmana

வெடியோசை கேட்டு
வீட்டை விட்டு ஓடும் நாய்களாய்
அன்று நாங்களும்….!!!

சீறுவாணம்…சின்னவெடி ..சீனவெடிய… பூவிறிசு
எதுவாயினும் நின்றிருக்க மாட்டோம்
ஒடுவது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

ஓடியோடியே பழக்கப்பட்ட நான்
வசதி வாய்ப்புகளால்
வெகுவேகமாக ஓடி மறைந்து கொண்டேன்
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையுடன்.

அமளி அடங்கிடத்தான் தெரிந்தது
நாம் பதுங்கியது
காடுகள்…பனிக்காடுகள்
பாலைவனங்கள்
குளிர் குத்தும் தேசங்கள் என்பது

கண்டங்கள் கடந்தபோதுதான் கண்டோம்
நாம் கடந்த கண்டறியாக் கண்டங்கள் என்று

ஊருக்கு வந்தோம்
ஊரைக் காணவில்லை
அதையும் களவெடுத்து விட்டார்கள்
அன்னியர்கள்.

உன்படத்தை வைத்து
யார்யாரே அழுதுகொண்டிருந்தார்கள்
ஒப்பாரிக்குக் கூடத் தமிழ் இல்லை.

காதுக்குள் கல்லெறியும் மொழியில்
கடுகடுக்கிறார்கள் சிலர்
எம்மக்களோ வாய்மூடி மௌனியாகி
தியானிக்கின்றனர்
இன்னொரு தேரோட்டிக்காய்.

உன்பிணத்தையும் எம் ஓட்டத்தையும்
காரணம் காட்டி காசு கறந்தவர்கள்
புதுப்புது கார் காராய் ஓடுகிறார்கள்
கொட்டல்களில் வாழ்கிறார்கள்
இவர்களை இனிப் புதுக்கப்பல்கள்
வாங்க விடுவதா என்பதைத்
தீர்மானிக்க வேண்டியது
நீயும் நானும்தான்

தட்டிக்கேட்கிறோம் என்பதனால் – நாம்
காலனின் கைக்கூலிகள் அல்ல
உன்னை நேசிக்கும் உண்மைகள்.

– நோர்வே நக்கீரா.

http://www.muthukamalam.com/verse/p1404.html

Posted in கட்டுரை | 1 பின்னூட்டம்

நாய் /கவிதை

நாய்            http://www.youtube.com/watch?v=3bHrQq9j2b4

Rottweiler_kopf_2என்வீட்டின்; கூட்டில்
கூடிப்பிறந்து
ஒடிப் பாடி விளையாடி
கூடி வளர்ந்து ஒரு நாய்

நண்பனாய்…அன்பனாய்
ஏவலுக்காய் சேவனாய்..காவலனாய்
அன்புள்ள ஆவலனாய்
கண்ணியத்துடன் கண்விழித்து
காலடியில் காத்திருக்கும்
கடமைதவறாக் காவல்நாய்

வருடங்கள் உருண்டோட
உருண்டு திரண்டு
எழுந்து நிமிர்ந்து வளர்ந்தது
குறுகிப்போனது கூடு
குலுங்கிப்போனது வீடு

கூடு குறுகிட
கழுத்தில் விழுந்தது சுருக்கு
சுருக்கு சுறுக்காய் சுருங்கினும்
மனதில் எழுவேயில்லை கிறுக்கு

சும்மாயிருந்த நாயை
சுரண்டிப்பார்த்தன
அயல்நாய்களுடன் தெருநாய்கள்
மிரண்டெழுந்து வாயை அகலத்திறந்து
காட்டியது தன் கொடும் பற்களை

கோரப்பற்கள் கண்டும்
குறையவில்லை குரோதங்கள் துரோகங்கள்
மீண்டும் உறுமி எழுந்தும்
என்சொற்கேட்டு அடங்கி முடங்கியது

காவல்நாயை
கடிநாயாய் வெறிநாயாக்க
கோல் கொடுத்தன விசர்நாய்களாம் தெருநாய்கள்
கட்டுப்பாடுடன் கட்டில்; நின்றநாயை
கடுப்பேத்தி வெறுப்பேத்தியபோதும்
மீண்டும் முறைத்துவிட்டுப் படுத்தது.

உறுமிப்பார்த்தது
குரைத்துப்பார்த்தது
வெருட்டிக்பார்த்தது
காது கொடுக்கவேயில்லை நாய்கூட்டங்கள்

என்னை இழுத்து வீழ்த்திவிட்டு
கட்டறுத்துக் கொண்டு
கலைக்கத் தொடங்கியது.

குதத்தில் குதிபட ஓடத் தொடங்கின
கத்திக்கொண்டு…குரைத்துக்கொண்டு
தடிகொடுத்தும் ஓடின தெருநாய்கள்
தடிகள் பொடி(க)யாயின

சாவுக்கள் மலிந்தன சாம்ராச்சியத்தில்
காலின் மேல் கால்போட்டு
கைதட்டி இரசித்து
தட்டிக்கொடுத்து வாழ்த்தி
தடவிக்கொடுத்துக் கொண்டார்
இயமதர்மராசமன்

இயமன்வீpட்டு இறைச்சியில்
ருசிகண்ட என்வீட்டுநாய்
வீடுதிரும்புமா? திரும்ப விரும்புமா?

குப்புறக்கிடக்கும் என்னைக் காண
திரும்பி வந்தது என்செல்லம்
«இனி நான் பார்த்துக் கொள்கிறேன்» என்றது

முகம் முழுவதும் இரத்தம்
வாயெங்கும் பிணவாடை
என்நாயை என்னால் இனி
தட்டிக்கேட்டவோ தடவிக்கேட்கவோ முடியாது

நாய்க்குப் கோல்கொடுத்து
உசுப்பேத்திய ஊர்விசர்நாய்களே – இனி
நாயும் நீங்களும் பட்டது பாடு
இரத்தவாடையில் வளர்ந்து குட்டிகளும்
காவலுக்குத் தயாராகிவிட்டன

அன்புடன்
நோர்வே நக்கீரா

 

Posted in கட்டுரை | பின்னூட்டமொன்றை இடுக

தாய் / கவிதை

                                  தாய்

images

மனத்தாய் மணாளனை மணந்தாய்
அகத்தாய் எனை விதைத்தாய்
ஆழமாய் உன்னில் பதித்தாய்
உதரத்தாய் வலித்திடப் பொறுத்தாய்
புறத்தாய் புரியாது வளர்த்தாய்– ஒவ்வொரு
கணத்தாய் எனையே நினைத்தாய்
கருவாய் உருவாய் கருவுற்றாய்
மாங்காய் உண்டு சலித்தாய்
கருத்தாய் மேனியுள் கமழ்ந்தாய்

உதரத்தாய் எனைப் படித்தாய்
உதிரத்தாய் எனை நனைத்தாய்- நான்தூங்க
இதயத்தாய் பாடலிசைத்தாய்
என்றறிவுக்கா(தா)ய் நீ படித்தாய்
உதைத்த(தாய்)தை நீ பொறுத்தாய்
வேதனை தாழாது விழித்தாய்

இடுப்பு வலிகள் மறுத்தாய்
நடக்கவே முடியாது படுத்தாய்
சுமந்தாய்
சுமந்து சுமந்தே இளைத்தாய்
பிரசவவேதனையில் துடித்தாய்

புறத்தாய் எனை எடுத்தாய்
புவித்தாயில் மடியில் படைத்தாய்
பாலாய் உதிரம் கொடுத்தாய்
நான் நோயாய் போகையில் துடித்தாய்
கருத்தாய் என்றும் வளர்த்தாய்
பொறுப்பாய்
பூமியாய் நிலைத்தாய்
நிலைப்பாய்
அறத்தாய் எனை வளர்த்தாய்
அறத்தாய் என சிறந்தாய்

என்பழிகள் அனைத்தும் பொறுத்தாய்
உண்டி ஊட்டி வளர்த்தாய்
நடத்து பழக எனைப்பிடித்தாய்
ஒவ்வொரு அடியையும் படித்தாய்
அழுது அழுதே சிரித்தாய்
நோய் நொடிகள் வராது தடுத்தாய்
அறத்தாய் எனை வளர்த்தாய்
அகிலத்தில் உயரவே நிறுத்தாய்

நீ இருப்பதாய் இருக்க
இன்னொருதாயாய் பிடித்தாய்
தாரத்தாய் கையில்
பிள்ளையாய் எனைக் கொடுத்தாய்
தாய்க்குத் தாயாய்
எனைத்தனித்துச் சுமந்ததாயே
எனை குழந்தையாய்
குவலயத்தில் குமுறவிட்டுப் பறந்தாய்
ஏன் எனை மறந்தாய்
மறைந்தாய்
மடிந்தாய்
காற்றாய் கருத்தாய் காதலாய்
என்மடிமீது வருவாய் தாயே
தரிசனம் தருவாய் தாயே

தாயர் தினத்தாய் எழுதிய கவிதை
நோர்வே நக்கீரா

Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

முடி (கவிதை) நோர்வே நக்கீரா

முடி (கவிதை) நோர்வே நக்கீராMudi with woman

பலபோர் வெற்றியின் முடிவுகளை
அலங்கரித்த முடியொன்று
சூதாடி முடியாது முடிதுறந்ததால்
தன்முடிவிழுத்தி முடிவிரித்து
முடியை முடியேன் என
முடிவெடுத்தாள் ஒருத்தி
முடிவில் உருண்டு முடிந்தன முடிகள்
குருதியில் ஓடியது குருசேத்திரம்
முடியாத முடியால் அழிந்தது குருகுலம்
நடந்து முடிந்தது மகாபாரதம்
தன் சிலம்பொன்று சிக்கியதால்
சினம்கொண்டு சீறி முடிகலைத்து
மூர்க்கமாய் எழுந்தாள் இன்னொருத்தி
முடிவாய் முடிதுறந்தான் பாண்டியன்
முடியாத அவள் கூந்தலால்
எரிந்து கரியாய் முடிந்தது மதுரை
கணவனை வேண்டி
முடியாத தன்நீள்முடியை52cd29c38d23b6466e9260973429a47d
முடியாது முடிவாக இருந்தாள்
அசோகவனத்தில் ஒருத்தி
முடியாத அவள் கூந்தலால்
முடிந்தது அரக்கர் குலம்
எரிந்து பொரிந்து முடிந்தது இலங்காபுரி

முடியாத கூந்தல்களால் இத்தனை
முடியாத முடிவில்லா அனர்த்தங்கள்
அழிவுகள் உயிர்சேதங்கள்.
முடியாத கூந்தலை
அவிழ்த்து ஆடவிட்டலையும் பெண்டீரால்
முடியப்போவது எது?
அழியப்போவது யார்?
எரியப்போவன எவை?
அரைமொட்டை ஆயினும்
அள்ளி முடிகிறார்கள் ஆண்கள்
முடிவின்றி காக்கப்படுவது எது?
வாழப்போவது யார்?

அன்புடன் முடியுடை
நோர்வே நக்கீரா!!!

Posted in கவிதை | 7 பின்னூட்டங்கள்

விழுதல் என்பது

 

உலகத்தமிழ் எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் ஒரு நெடுந்தொடர். இது பல இணையத்தளங்களில் தரவேற்றம் செய்யப்பட்டள்ளது. இது ஒரு தமிழ் அகதியின்கதை. இந்த சீலன் என்ற அகதியை எழுத்தாளர்கள் பேனாவினுள் போட்டு பிளிந்த அதை பக்கம் பக்கமாக எழுதி அழுது இணையங்களில் தரவேற்றம் செய்கிறார்கள். ஒருவர் எழுதிமுடித்த இடத்தில் இருந்து மற்றவர் தொடர்வார். முந்தியவர் எப்படி முடிப்பார் மற்றவர் எப்படித் தொடர்வார் என்பது யாருக்கும் தெரியாது எழுதும் எமக்கும் தெரியாது. சுவையான ஒரு நெடுந்தொடர்கதை அனைவருக்காகவும். இந்தச் சீலன் எனும் அகதி நீங்களாகவும் இருக்கலாம். தொடர்ந்த வாசியுங்கள். இதுபற்றிய காணொளியை இங்கே தருகிறேன். இணைப்பைச் சுடுக்குங்கள்

Villuthal

Posted in கட்டுரை | பின்னூட்டமொன்றை இடுக

காட்டுதல்

காட்டுதல்

1tamil-girl-surekha-vani-sexy-look-12_650

 

 

 

 

 

 

 

விலைக்குக் காட்டினால்
விலைமாதர்கள்.
விலக்கிக் காட்டினாலும்
விலைமாதர்தான்.
விலக்கி
விலைக்கு காட்டும்
நடிக நடிகைகள்
என்னமாதர்… எந்தமாந்தர்???

இங்கே தமிழ் அழகா?
தமிழ் பெண்ணழகா?

Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

காளை மாடு

Okse_angriper_16x9

 

 

 

 

காளை மாடு

கொட்டிலை விட்டு
கட்டவிழ்த்துக் கொண்டு
வெறிகொண்டோடியது
வெள்ளைக்காளை.

சுதந்திரம் விடுதலை என்று
தறுதலையாய்
கட்டில் கிடைத்த புண்ணாக்கையும்
களிநீர் கஞ்சியையும் விட்டுவிட்டு
கம்பு காய்ந்த வெளிகளில்
காதல் காமம் ஊடல் கூடல் என்று
தேடித் தேடியே தேடுவாரற்றுப் போக….

கண்டதையும் கடித்து
நின்றதையும் தின்று தீர்த்தாலும்
கண்ணுக்கு என்றும்
இச்சைகள்
தூரத்துப் பச்சைதான்.

கட்டி வைத்துவனைக் கூட
காலால் அடித்த காளை
கட்டில் நின்று கன்னிக்கன்றின்
கண் பட்டு
கட்டுப்பட்டு
சுதந்திரம் விடுதலைகளை விட்டு
விடு தலையாக்கி
கட்டில் விழுந்து கட்டுப்பட்டது.

கட்டுப்பட்டது
கட்டில் நின்ற
கன்னிப்பசு என்கிறார்கள்
கண்கெட்டவர்கள்.

நோர்வே நக்கீரா
20.02.2014

Posted in கட்டுரை, கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

சின்னக்காதல்

சின்னக்காதல்

வளர்ந்து
வானை வளைத்து
யானைபோல் உயர்ந்து பருத்து
தானைத் தளபதியாய் தலைநிமிர்ந்து
ஊரில் வேரூன்றி விழுதுவிட்ட
அந்தவிருட்சம்…..!

பறவைகளின் பாசறையாய்
குருவிகளின் கூடாரமாய்
குஞ்சுகளின் மஞ்சமாய்
நின்றது அந்த மரம்…!

எதையும் எண்ணிக் கலங்காது
எதிர்ந்து நின்று வென்று
எவர்க்கும் உதவிய விருட்சம்
அருகால் பறந்து சென்ற
சின்னச் சிட்டின் சின்ன
கண்ணடிபட்டுப் கலங்கிப்போனது

வேரோடு சாய்ந்தது
ஊரோடு மாய்ந்தது.

நோர்வே நக்கீரா (15..02.2014)

Posted in கட்டுரை | 3 பின்னூட்டங்கள்

தொங்குகிறோம் சிலுவையில் இன்னும்

தொங்குகிறோம் சிலுவையில் இன்னும் : நோர்வே நக்கீரா
யேசுவே!
மாரி மழையில்
மாட்டுத் தொழுவத்தில்
மாரியம்மனுக்கு (மாரியாள்)மகனானாய்உனக்கு
மாட்டுத்தொழுவமாவது இருந்ததுதிறந்தவெளித் தெருக்களிலும்
அடர்ந்த புதர்காடுகளிலுமே
எம்பிள்ளைகளின் பிறப்புகள்கண்ணுக்குத்தெரியா
கணவனல்லாக் காளையன் ஒருவன்
கலவிகொண்டதால் – நீ
கர்த்தரின் குழந்தைஈழத்தில் உன்னைப்போல்
எத்தனை குழந்தைகள்
எத்தனை எத்தனையோ யேசுக்கள்- ஆம்
அத்தனையும் உன் சகோதரங்கள்
எண்ணிலடங்கா மாரியம்மன்கள்
உங்களுக்கு உலகெங்கும் ஆராதனை
எம்மக்களுக்கு மட்டுமேன் பெருவேதனை?மாரியை
மறுமணம் முடிக்க
யோசப்பு
தமிழ்விதவைகளுக்கு…..யாரப்பு?முற்போக்குவாதிகள்
முந்தானை கேட்கிறார்கள்.சமூக ஆவலர்கள்
கசமுசா பண்ணுகிறார்கள்.இசக்காரர்கள்
நிசம் பேசவில்லை.அரசியல்வாதிகளோ
அடித்தொட்டையால் அகிலம் அளந்து
வோட்டுக் கேட்கிறார்கள்விபச்சாரிகள் என்று
விலைபேசுகிறார்களே
மகிந்தனின் மைந்தர்கள்.மாவீரர்களை வணங்கிய மக்கள்கூட
வீரத்தைத் தேடுகிறார்கள்
மாவீரிகளின் மடிகளில் இன்று.நீ மதத்தினுள் நின்று பேசினாய்
மானிடவிடுதலை
பரிசாகக்கிடைத்தது …..!!!
சவுக்கடி…
தோழில் சிலுவை….
தலையில் முள்முடி….பிறப்புரிமை விடுதலை
விரும்பிய எமக்கு
கிடைத்த பரிசோ
உன்னைவிட பெரிசே.வெள்ளையனும்
கொள்ளை அரசியல்வாதிகளும்
எம்மைச் சிங்களவர்களுக்கு
விற்றகாலம் தொட்டு
நாம் சிலுவைகளிலேயே தொங்குகிறோம்மூன்றாம் நாளில் உனக்கு மோட்சம்
எமக்கு எப்போ….?
சொல்லையா சொல்….?நீ மேய்ப்பனானாய்
தவறிய ஓராட்டை தேடிப்போனாய்
நாம் தவறவிட்டது எத்தனையோ இலட்சம்
உன்னால் எண்ணித்தான் பார்க்க முடியுமா?மேய்ப்பன் நீயென்று எண்ணி
புலி சிங்கங்களால் மேய்க்கப்பட்டோம்
முள்ளிவாய்க்கால்வரை.கொலைவெறியில் தின்றது போக
மீதம் நந்திக்கடலினுள் நாறியபோதும்
உலகிற்கே மணக்கவில்லை ஐயோ!!
உனக்குமா யேசுவே!!!!ஆயுதங்களுடன் மௌனித்துப் போனது
எம்வார்த்தைகளும்
வாழ்வும்….மானிடமும்
எம்செத்தவீட்டில் உனக்கு
பிறந்ததினவிழாவா?பாராளுமன்றப்பலிபீடத்தில்
மகிந்தன் முன்னிலையில்
தமிழ் உயிர்கள் பலி
உடல்கள் படையல்கள்
கொல்லாமை கூறிய புத்தனின்
பல்லை பிடுங்கியபின்
வெசாக்விழா கொண்டாடி
நரமாமிசம் படைக்கிறார்களே
புத்தனும் புசிக்கிறானே
நிறைமாமிசம்.யேசுவே!!
அண்ணன் புத்தனிடம்
நீயும் தோற்றுவிட்டாயா?உலகெங்கும் விழா உன்பிறப்புக்கு
கலகங்களின் வாழ்வுதானா என் இருப்புக்குயேசுவைத் தேடும்
நோர்வே நக்கீரா
24 12 2012
Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

பனிவாழ்க்கை

பனிவாழ்க்கை (கவிதை வடிவம் 1)

சூரியன் செத்துத் தொலைந்த தேசம் எங்கணும்
ஆரியன் வாழ்வென வரலாறு இயம்பும்- இங்கே
வெண்பனி மேகங்கள் கூடி ஊர்வலம் போகும்
தண்மதி மறைந்து குளிர் வெண்மதி காயும்.வானம் வீசும் வெள்ளைப் பூக்கள்
சீலம் உறையும் வெண்பனி நாட்கள்
மிதித்து மிதித்தே இதயம் இறுகும் – பாதம்
பதிந்து பதிந்தே பனி உறைபனியாகும்வானம் விட்டு விழுந்த வெண்பனி
மானம் கெட்டுப் போகுமா இனி?
குறுகிய வெண்பனி இறுகிடும் வேதனை- அதனால்
வெறியுடன் கிடந்து விழுத்திடும் சாதனைவழுக்கி விழுந்தால் வாழ்க்கை சிதறும்- இங்கே
வழுக்கி விழுவதே வாழ்க்கையும் ஆகும்- ஊரில்
வழுக்கி விழுந்தால் விபச்சாரி என்பர் – இங்கு
வழுக்கி விழுவதே அனுபவமென்றறிவர்.நெஞ்சை நிமிர்த்தி நடந்தவர் எல்லாம்
நெஞ்சாங் கட்டையில் கட்டை வைப்பர்
அடக்கு முறைகள் ஆண்டால் அதிகம்
இடக்கு முடக்காய் எதிர்ப்பே வெடிக்கும்.பனிக்குக் கூட எதிர்ப்புணர்வு உண்டு – இது
தனித்த தமிழா உண்டா உனக்கு
அடிபட்ட நாயே திருப்பிக் கடிக்கும்
முறிபட்ட பின்புமா மௌனம் சிறக்கும்வழுக்கும் பனியில் சறுக்கியே செல்லுக- இனத்தை
இழுத்து விழுத்தும் இழிமையை விடுக
அணைத்து வெல்லும் தந்திரம் உண்டெனில்
அனைத்து வெற்றியும் உனதென்று கொள்க:::::::::::::::::::::

பனிவாழ்க்கை (கவிதை வடிவம் 2)
:
சூரியன் செத்ததால்
பஞ்சு பஞ்சாய் அழுகிறது
வெண்முகில்கள்.தந்தை தவறியதால்
சிந்தை கலங்கி
விழுந்து கொள்ளும்
வெண்பனிகள்விழுந்து
தனை மறந்து
மனமிழந்து
அழுது அழுதே
இறுகிப்போனது இறுகுபனிமிதித்து மிதித்தோ
மதியிறுகிப்போனதனால்
வழுக்கி விழுத்தும்
வல்லமை கொண்டது.தன்னினத்தை
இழுத்து விழுத்தும்
ஈனச்செயல் விட்டு
பனிபோல்
எதிரியை வழுக்கி விழுத்தும்
வல்லமை கொள்கஉருகி உருகிக் குளிரில்
இதயம் இறுகி
வைரம் பாயந்த நெஞ்சுரம் கொண்டதால்
நெஞ்சு நிமிர்த்தி நடந்தவரெல்லாம்
நெஞ்சடி பட்டு
மாட்டமை கண்டிடும்வழுக்கல் பனியில்
சறுக்கிப் போவதே
வாழ்வின் வல்லமை
என்பதை அறிந்திடும்.காலத்துக்கேற்ற மாற்றங்களை கண்டு
போராடி வெல்லும் மார்க்கத்தை பெறுக:::::::::::::::::::
பனிவாழ்க்கை (கவிதை வடிவம் 3)
:::
வெள்ளை வெள்ளையாக
விழுந்தது வானம்
கொள்ளை கொள்ளையாய்
மனங்களில் சோகம்
வெள்ளை புடவையுள்
விழுந்தாள் பூமி
மனிதன்
விதவை என்றே
மகிழ்ந்தான் சாமிவிதவையின் மேலே
வினைசெய்ய விரும்பி
வினைசெய்தானே
விபரீதமாக
வித்தை காட்டி
விதவையை மிதித்தான்
விடுதலையாகி
விடுதலையானான்.குடித்த மார்பை ஏறி மிதிக்க
மிதித்து மிதித்து தசையும் தடிக்க
மிடுக்குடன் நடந்த மமதை மனிதர்
மார்பில் சறுக்கி விழுந்தே மரணமடைவர்
இது மார்பின் மயக்கம்செத்த முலையென்று
செருக்குக் கொண்டால்
சேய்யாயினும்
செத்தே போவாய்
உண்ட முலையில்
கண்டது மரணம்வழுக்கி விழுந்தால்
வாழ்வே சிதறும்
வழுக்கி நடந்தால்
வாழ்க்கை வளரும்வழுக்கும் வாழ்வை
வழுக்கிக் கடக்க
வழுக்காது போனால்
விழுக்காடு தானேபஞ்சின் மேலே படுத்துத் தூங்கும்
பஞ்சணைக்கனவு எமக்கு எதற்குவழுக்கி விழுந்தால்
அபச்சாரம் என்பார்
விபச்சாரம் என்று
விரிவுரை கொள்வார் – இங்கே
வழுக்கி விழுந்து அனுபவம் தேடு
வாழ்க்கை வளரும்
வழுக்கும் வாழ்க்கை
நோர்வே நக்கீரா
09 12 2012
Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

காவுபோன பேச்சும் எழுத்தும் 18.02.15

20150221_blp901

 

 

பேச்சுக்களும்
பேனாக்களின் மூச்சுக்களும்
தலைநகர் டென்மாக்கில்
ஒரு தலையாய சந்திப்பு
சுதந்திரத்தை தன்னுள் சுட்ட பூரான்கள்
சுடுகோலுடன் சுற்றித்திரிந்தன
அல்லாதவரை அழைத்தபடி
இருளுக்குள் இருள்மர்
பேய்நாக்களால்
பேனாக்களுக்கு
தேவைப்பட்டது காவல்
சுடுகோல் துப்பிய துளைகளினூடாக
தலைகீழாக நின்ற பேனாக்களின் தலைகளால்
வழிந்து கொண்டிருந்தது
சிவப்பு சுதந்திரம்
பேச்சு மூச்சின்றி
வாய்மூடி
மெளன அஞ்சலில் செய்தது பேச்சு
மூச்சுக்கு மூச்சு
பேச்சு சுதந்திரத்தை எழுதிய
எழுத்துச் சுதந்திரம்
ஊடகங்களுள்
புதைத்து மறைக்கப்பட்டது.
கொல்லை வாசலைத்திறந்து
அல்லாப்பிள்ளைகளை
நாட்டினுள் நுளையவிட்டு குற்றத்துக்காக
பேச்சும் எழுத்தும்
நாடுகடத்தப்பட்டன பிணங்களாக.
மூச்சிழந்தது நாடு
பிற்குறிப்பு:- பேச்சு எழுத்து சுதந்திரம் பற்றிய தலைப்பில் நடைபெற்ற சந்திப்பில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதால் இரண்டு மென்மாக் பொலிசார் கொல்லப்பட்டனர் இரண்டு பொலிசார் காயமடைந்தனர். செய்தி 15.02.2015 நேரம் 15:31
பேனா எனும் போர்நாவுடன் நோர்வே நக்கீரா. 18.02.2015
நோர்வே நக்கீரா

 

Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை வரலாற்றில் பின்நோக்கிய ஒருபார்வை.

இலங்கை வரலாற்றில் பின்நோக்கிய ஒருபார்வை.

இலங்கையில் போரும், இனக்கலவரங்களும் காலங்காலமாக நடந்து வந்திருக்கின் றன. இன்று உலகம் அறியும் அளவிற்கு ஒர் இனவழிப்பு நடந்து முடிந்ததுபோல் மௌனமாக அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தப்பிரிவுகள் பிளவு கள் இதற்கான காரணங்கள் என்ன? எப்படி இருக்காலம் என்பதை அறிய சரித்திர த்தின் ஏற்பட்ட தரித்திரங்கள் எவையென்பதை பார்வையின் கோணங்கள் தேடுகிறது.

பார்வையின் கோணங்கள். :- நாகர், இயக்கர், விஜயன், புத்தர்

இலங்கையில் விஜயனின் வருகைக்கு (கி.மு. 483) முன்னர் இயக்கர், நாகர் என்றிரு சகோதரத்துவ இனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவ்வினங்களின் நம்பிக்கை களே இவர்களின் வேற்றுமைக்குக் காரணமாக இருந்தது எனலாம். நாகர்கள் நாகங்க ளையும் இயற்கையையும் வணங்கினர். இவர்கள் ஈழத்தமிழர்களின் ஆவார்கள். இந்த நாகவணக்கமானது சிந்துவெளிநாகரீகம் தொட்டு இன்றுவரை இந்துக்களால் கடைப்பிடி க்கப்பட்டு வருவது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. இயக்கர்களை அரக்கர் எனசொல்ல பலர் முயல்கின்றனர்.இவர்கள் இயற்கை வணக்கத்தைக் கொண்டவர்க ளாகவே இருந்திருக்கிறார்கள்.உலகிலுள்ள அனைத்துஆதிமனிதர்கள்; இயற்கையையே வணங்கினர். இந்துக்களின் முதல் வேதமான இருக்கு இயற்கை வணக்கத்தையும் சிவவழிபாட்டையுமே வற்புறுத்துகிறது ஆதிமனிதன் தனக்கு மீறிய தன்கட்டுப்பாட்டு க்கு அப்பாலுள்ள அனைத்தையும் கடவுளாகவே கண்டிருக்கினான். அதன்பின்னரே ஆண்குறிய+டாகவே உயிர் உருவாகிறது என்பதை உணர்ந்திருக்கிறான். இயற்கை லிங்க உருக்கொள் ஆண்குறியூடாகவே தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதை உணர்ந்து லிங்கவழிபாட்டை உருவாக்கினான் என அறியமுடிகிறது.

இதையடுத்து பூகோளரீதியான இலங்கை பற்றி அறிவதும் அவசியம் ஆகிறது. இது தாழ்ந்து போன குமரிக்கண்டம் அல்லது லெமூறியாக்கண்டத்தின் எச்சம் சொச்சம் என்றே பல அறிஞர்கள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஈழவர்கள்வரலாறு என்று பார்க்கும் போது இலங்கை தொண்டைநாட்டை அண்டியபகுதியாக இருந்ததாக வும் இதனால்தான் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும் அறிய

முடிகிறது. அப்படி அமைந்த காரணத்தினால்தான் விஜயனும் அவன்துஸ்ட நண்பர்க ளும் இலங்கையில் மிதந்தது சாத்தியமானது.அதே போன்றதே பௌத்தமதவருகையும். உலகின் கிழக்கு நோக்கிய பௌத்தமானது திராவிடப்பௌத்தம் என்றே கருதப்படுகிறது.

தமிழ் வேற்று மொழிகளுடன் கலந்தே திராவிடமொழிகள் உருவாயின. இந்தத்திராவிட

ர்களில் தெலுங்கர்களும் அடங்குவர். இவர்கள் கலிங்கத்தை அண்டி இருப்பதால் பௌத்தமதத்தின் பாதிப்பு இலகுவாகவும் அதிகமாகவுமே இருந்தது. இதனால் இலங்

கையில் பௌத்தமதப்பரம்பலில் தெலுங்கர்களுக்கு போதிய அளவு பங்களிப்புள்ளது. மகாவம்சம் எனும் ஐதீக மித்துக்கதைகளை எழுதிய மகாநாம என்பவர் தெலுங்கு தேசப்பல்லவன் என்றே துணியலாம்.

இதில் வேறுசில ஆய்வுகள் கூறுகின்றன இலங்கை ஆபிரிக்காவுடன் ஒட்டியிருந்தது என்றும் குமரிக்கண்டம் தாழும் போது அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இழுத்துச் செல்லப்பட்டுபோது மிஞ்சியிருந்தது தான் இலங்கை என்று கூறுகிறார்கள். சிங்கள மொழியில் ஆபிரிக்கமொழிக்கலப்பு இருப்பதையும் அறியமுடிகிறது. இலங்கை குமரிக் கண்டத்தின் மிச்சமோ இந்திய உபகண்டத்தின் மிச்சமோ எதுவாயினும் இந்தியாவின் பெரும்பாதிப்பு இலங்கையில் காலங்காலமாக மத, காலாச்சார,உறவுநிலைகள் இருந்து வந்திருக்கின்றன.

மகாவம்சப்படி புத்தர் ஞானம்பெற்று 9மாதத்துக்குப்பின்னர் இலங்கை வந்தபோது மகாநாகா எனும் மகியங்கனையின் திருமணத்துக்காகக் கூடியிருந்த இயக்கர்களை

சந்தித்து அவர்களுக்கு அருள்புரிந்ததாகக் கூறப்படுகிறது. இயக்கர்கள் அருவியாறு மகாவலிக்குத் தெற்கே தாமிரபரணிப்பிரதேசம் (தென் தென்மேற்குப்பகுதி) எங்கும் வாழ்ந்தார்கள் ஆதாரம் வாந அயாயஎயஅளயஇ ழி.உவை.உhயிவநச 1:20-30pp 3-4.

நாகர்கள் இலங்கை முழுவதும் பரவிவாழ்தாலும் வடபகுதியில் செறிந்து வாழ்தகார ணத்தினால் நாகதீபம் பின்னர் நாகதீவு என்று அழைக்கப்பட்டது. புத்தர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது இரண்டு நாகஅரசர்கள் மகோதரன், குலோதரன் (மருமகன்) இரத்தினசிம்மாசனத்துக்காக போரிட்டபோது புத்தர் அவர்களை சாமாதானப் படித்தி மனம் மாற்றினார். அதனால் இரத்தினசிம்மாசனத்தை புத்தருக்கோ கொடுத்து விட்டனர். இது மணிமேகலை எனும் காப்பியத்தில் காணலாம் (ஆதராம் மணிமேகலை காதை 8இ வரி 52-63) கல்யாணி இராசதானி(தென்மேற்கு இலங்கையில் சிலாபத்தின் கீழ் உள்ள தாமிரபரணி பகுதி) நாகயரசன் மணியக்கியன் புத்தரின் போதனையில் மனம்மாறி மதம்மாறியான் என்பதை மகாவம்சம் கூறுகிறது (ஆதாரம் the mahavamsa, op.cit.chapter 1:20-30pp 3-4)

ஆக இலங்கைத்தமிழர்கள் ஆதியில் பௌத்தமத்தையும் தழுவி இருந்தனர் என்பது புலனாகிறது.தனபாக்கியம் (ஆய்வாளர்) எழுதிய ஜி.மு.கு.நூல் பக்.26ன்படி இலக்கியம் பண்டைய தேசம்படம் (தொலமி) யில் இருந்து நாகர்கள் இலங்கை முழுவதும் வாழ்ந் திருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். கி.மு 5ல் பாக்கியான் எனும் பயணி தன் குறிப்பில் இலங்கையில் தேவதைகளும் நாகர்களும் வாழ்ந்தார்கள், அது வியாபாரமை யமாக இயங்கியது என எழுதியுள்ளார்.

இந்த இயக்கர், நாகர் எனும் இனத்தவர்களை சிங்கள வரலாற்றாசிரியர்கள் மனிதர்க ளாக ஏற்கமறுத்து விஜயனின் பின்னரே இலங்கையில் குடியேற்றம் நிகழ்ந்ததென நிறுவமுயல்கின்றனர். அப்படியானால் விஜயன்பரம்பரைதான் சிங்களவர்கள் என் றால் இவர்கள் வந்தேறு குடிகள் என்பதை சிங்கள ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். சிங்களவர்களின் ஆதிமொழியான எலுவும் ஒரு திராவிடமொழிகளில் ஒன்றாகவே இருந்தது. தொண்டைநாடு அதாவது இன்றைய தெலுங்கானாவிலுள்ள துலு மொழியுடன் எண்ணித்துணியலாம். இந்த முற்றுப்பெறாத எலுமொழி பௌத்தமத மொழியான பிராகிருதத்துடனும் தமிழழுடனும் இணைந்து சிங்களமொழி உருவானது என்பதை பல ஆய்வுகளில் இருந்து அறிய முடிகிறது. கலாநிதி சிற்றம்பலம் எழுதிய தமிழ்மக்களின்பாரம்பரியப் பிரதேசம்;, முத்தமிழ்விழாமலர் 1991பக்163ல் சிங்களவிஜயன் வருவதற்கு முன்னரே வடவிலங்கையில் நாகரீகமடைந்த திராவிட இனமொன்று வாழ் ந்தது என்பதை நிரூபிக்கிறது. சேர் போல் பீரிஸ் என்ற பேரறிஞ்ஞரின் கருத்துப்படி விஜயன் என்று ஒருவன் பிறப்பதற்கு முன்னரே இலங்கையில் வடபகுதியில் நாகரீகம் அடைந்த திராவிட இனம் குடியிருப்புக்களை ஏற்படுத்தி சிறப்பாக வாழ்ந்தார்கள் எனக் கூறியுள்ளார்.

இலங்கையின் ஆதிகுடிகளான இயக்கர், நாகர்கள் எனும் திராவிட இனத்தைக் சார்ந் தவர்கள் என்பதை ஈமக்சின்னங்கள்,பிராமிக்கல்வெட்டுக்கள், சமயவழிபாடுகளிலிருந்தும் பலாங்கொடை அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட மனித எலும்புகள் காட்டுகின்றன.விஜயனு க்கு முன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் திராவிடயினம் வாழ்ந் ததை காட்டுகிறது.

பார்வையின் கோணம்

புத்தமதப்பரம்பலும் முரண்பாடுகளும்:-

இனி இந்தமுரண்பாடுகள் எப்படி உருவானது எனக்காண்போம். பௌத்தமதமானது அசோகனால் சங்கம் அமைத்துப் பரப்பப்பட்டது என்பதை யாவரும் அறிந்ததே. அவனின் மகளான சங்கமித்திரை வெள்ளரசமரக்கிளையுடன் மாதகலுக்கும் திருவடி

நிலைக்கும் இடையிலுள்ள சம்பில்துறை எனும் துறைமுகத்திநூடாக இலங்கை புகுந்தாள் என்கிறது ஒரு ஆய்வு. ஜம்புக்கோணப்பட்டணமான காங்கேசன்துறையூடாக வந்தாள் என்கிறது இன்னொரு ஆய்வு. ஆனால் அரசமரங்கள் அதிகம் காணப்படும் பிரதேசம் சம்பில்துறையை அண்டிய இடங்களே. துறை என்பது துறைமுகங்கள் என்று நான் இன்று பாவிக்கிறோம். சம்பில்துறை என்று இருப்பதால் இது கப்பல்கள் வள்ளங் கள் வந்திறங்கும் துறைமுகம் என்பது தெழிவாகிறது. சம்பில்துறையில் நாம் குளிக்க ப்போகும் காலத்தில் கருங்கலாலான தூர்ந்துபோன ஒரு வளைவைக்கண்டேன் அதில் சங்கமித்திரை வளைவு என்றிருந்தது. இவள் கொண்டுவந்த அரசமரக்கிழை ஒன்று பறாளாய் முருகமூர்த்தி ஆலயத்தில் நடப்பட்டது (செவிப்புற்றது). இவளுடன் வந்த மகிந்த எனும் பௌத்ததுறவி தென்திசை சென்று தேவநம்பியதீசனான இந்து அரசனைச் சந்தித்து தன்போதனைகளால் அவனை மதம்மாற்றினார். இது மக்களி டையே பெரும் முரண்பாடுகளை தோற்றுவித்தது. அதேவேளை சங்கமித்திரை வடபுல த்தில் தனது மதம்பரப்பும் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் என அறிய முடிகிறது.

எனது காலங்களில் அரசமரங்களின் கீழ் நாகதம்பிரான் கோவில்கள் அமைந்திருப் பதைக் கண்ணுற்றிருப்பீர்கள். இந்தச்சான்றே போதும் நாகர்களாகிற தமிழர்கள் சிங்களவர்களுக்கு முன்னர் இந்துமதத்துடன் பௌத்த மதத்தையும் தழுவியிருந்தார் கள் என்பதை நிரூபிக்கலாம். இந்துக்களாக இருந்த தமிழர்கள் பௌத்தர்களாகவோ, அல்லது இருமத்தையும் ஏற்றுக்கொண்டோ வாழ்ந்திருக்கலாம். புத்தரை போதிமாதவன் என்று இந்துமதம் ஏற்றுக் கொண்டுள்ளமையும் ஒருசான்றாகிறது. பௌத்தம் சிங்கள மொழிக்கோ, இனத்துக்கோ சொந்தமானது அல்ல. தமிழின் ஐம்பெரும் காப்பியங்க ளில் இரண்டு காப்பியம் பௌத்தகாப்பியம் என்பது நிரூபணம். இந்து, பௌத்த, சமணர் காலங்களிலேயே தமிழும் தமிழின் வளர்ச்சியும் சிறப்பெய்றிருந்தது ஆதாரமா கிறது பௌத்தத்தை சிங்களவர்கள் தமது என்று உரிமைகொண்டாட இயலாது. மீண்டும் இந்தியாவில் புத்தமதம் நாயன்மார்காலத்தில் தெற்கிலிருந்து விரட்டியடிக்க ப்பட அதேமாற்றம் இலங்கையின் வடபுலத்திலும் நடந்தது. தென்பகுதியில் மாற்றப் பட்ட சிங்களவர்கள் அப்படியே பௌத்தத்தை கொண்டிருந்தார்கள் என்பதே வரலாறு.

முக்கியமாக கந்தரோடையில் ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் கிடைக்கப் பெற்ற அகழ்வாய்வுகளில் இருந்தும், கல்வெட்டுக்கள் தாழிகளினூடான தென்பிராமி எழுத்துக்கள் ஊடாகவும் தமிழர்கள் பௌத்தர்களாகவும் தென்பகுதியில் பௌத்த மடாதிபதிகளாகவும் கந்தரோடையிலேயே பௌத்தசங்கம் அமைத்து மதம்பரப்பியதும் தெரியவருகிறது. ஆதாரம் இந்திரபால சிந்தனை 111-2 பக்கம் 158. அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற பிராமி எழுத்துககளில் காணப்படும் இந்துப்பெயர்களில் இருந்து தமி ழர்கள் பௌத்தம் இலங்கையில் மையங்கொள்வதற்கு முன்னரே இந்துக்களாக இருந் துள்ளனர் என்பது தெளிவு.

மகாவம்சத்திலோ சூழவம்சத்திலோ மற்றைய நூல்களிலோ சிங்களவர்களை எங்கும் ஆரியர்கள் என்ற குறிப்புக் கிடையாது. இந்நூற்களில் திராவிடரை தமிழர்கள், பாண்டி யர்கள், கேரளர், சோழர், கன்னடர், நாயக்கர்கள் என்பது போல சிங்களவர்களை “சிகளர்கள்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தம் வடவிந்தியாவில் இருந்து வந்தது என்பதற்காக சிங்களவர்கள் தம்மை ஆரியர்களாக வரிந்து கொள்வது தகாது. யப்பானிலும் சீனாவிலும் பௌத்தம் குடிகொண்டிருப்பதால் அவர்கள் ஆரியர்களா?

வடபெரும் நிலப்பரப்பு நாகதீபம் என்றும் நாகதீவு என்றும் தென்பெருநிலம் தம்பண்ணை, தாமிரபரணி என்றும் அழைக்கப்பட்டது. இந்தநாகதீபம் தமிழர்வாழந்த பகுதியாகவும் அது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்குடாவை உட்கொண்டதா கவும் இருந்தது.

கி.மு 483 குஜராத்தைச் சேர்ந்து லாடா நாட்டுமன்னன் ஊருக்கு உதவாத தன்மகனை யும் அவனுடைய 700 நண்பர்களையும் மரக்கலங்களில் ஏற்றி நாடுகடத்தினான்

என்றும் அவர்கள் தாமிரபரணி என்ற கொணாநதியான காலஓயாவுக்கும் கதம்பநதி யான அருவியாற்றுக்கும் இடையுலுள்ள பிரதேசத்தில் இறங்கினர் என்றும்(ஆதாரம் மகாவம்சம் பகுதி1 பக்கம்.46,47) அதில் இருந்தே சிங்கள மக்கள் தோன்றினர் என்றும் இவர்கள் வந்திறங்கியபோது நாகரீகம் அடைந்த மக்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்றும் கூறுகிறது ( ஆதாரம் கலாநிதி குணராசா, குடியேற்றங்களால் இழந்து போன தமிழ்பிரதேசங்கள். முத்தமிழ் விழாமலர் யாழ்பாணம் பக்கம் 129). ஆக சிங்களவர்கள் வந்தேறுகுடியினர் என்பதை மகாவம்சமே கூறிநிற்கிறது

வட தென்புலங்களை மாறிமாறி தமிழ சிங்கள் மன்னர்கள் ஆண்டபோதும் வரலாற்று க்காலம் தேவநம்பியதீசனுடனே ஆரம்பிக்கிறது எனலாம். இவன் காலத்தின் பின்னரே வடக்கு (உத்ராயணம்) தெற்கு (தட்சணாயணம்) என இருபெரும்பிரிவுகள் உருவாகி போரும், புரட்சியுமாக இருந்தது. சாம்பிராட் அசோகனின் பௌத்தம்பரப்பும் தூதர்களாக மகிந்ததேரரும் சங்கமித்திரையும் ஜம்புக்கோணப்பட்டணத்தினூடாக அதாவது காங்கேசந்துறை ஊடாக (சில ஆய்வுகளில் சம்பில்துறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது) பௌத்தத்தை பரப்பியபடி அனுராதபுரத்துக்குச் சென்றனர். வடதென்புலங்களில் உள்ள சிற்றரசர்கள் தேவநம்பியதீசனின் ஆட்சிக்குட்படிருந்த னர். இவர்கள் இந்துக்காக இருந்தனர் என்பதற்கு பேதிய அளவு ஆதராங்கள் உள்ளன. சிவ என்ற பெயர்கொண்ட பெயர்கள், தாழிகள், கல்வெட்டுக்கள், சான்று பகிர்கின்றன. முக்கியகுறிப்பு தேவநம்பியதீசனுடைய தந்தையின் பெயர் முத்துசிவன் மூத்தசிவன் என்று அழைக்கப்பட்டான். இவன் வாழ்ந்தகாலம் கி.மு 307-247. தேவநம்பியதீசனின் காலம் கிமு. 247-207 ஆகும்.

தேவநம்பியதீசன் மகிந்ததேரரால் மதம்மாற்றப்பட்டதை மக்களும் சிற்றரசுகளும் எதிர்த்தனர். இருப்பினும் அரசன் எவ்வழி மக்கள் அவவ்வழி என்பதற்கமைய மத மாற்றம் வெகுவேகமாக நடந்தது. தேவநம்பியதீசனுக்கு அசோகனின் உதவியிருந்த தால் பலசிற்றரசுகளை தன்வசம் கொண்டிருந்தான். அவனின் மறைவுக்குப்பின்னர் பலவாண்டுகள் பலதசாப்தங்களாக தென்புலமன்னர்களால் வடபுலத்தை தம்கட்டுப்பா ட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. சேனன், குப்தன், எல்லாளன் என மகாதீரம் பொருந்திய தமிழ்மன்னர்கள் அனுராதபுத்தைத் தம்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த னர். ஆக தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே வடக்கு தெற்கு எனபோர்கள் உருவாயின. வடபுலத்தமிழ் மன்னர்கள் படையெடுக்கும் போது தட்சணாயம் நோக்கி சிங்களவர்களும், தென்புலத்தரசர்கள் படையெடுக்கும்போது தட்சணாயம் நோக்கி தமிழர்களும் ஒடிஒளித்தும், தஞ்சமடைந்தும், மறைவிடங்கொண்டும் இருந்தனார்.இந்தப் பெரும்பிரிவே ஈரினமாக துவேசம், இனவெறி எனப்பேருப்பெற்று இனவழிப்பில் வந்து நிற்கிறது.

பார்வையின் கோணங்களில் விழுந்த சிலகேள்விகளை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

கேள்வி ஒன்று

கௌதமபுத்தர் கிமு 5 அல்லது 6ம் நூற்றாண்டில் பிறந்தார் 29வயதில் ஞானம் பெற்றார் எனப்பன்மொழி ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் மகாவம்சத்தில் புத்தர் இருமுறை இலங்கைக்கு வந்தார் என்றும், முதற்தடவை தாமிரபரணிக் கும் இரண்டாம் தடவையாக நயினாதீவுக்கும் விஜயம் செய்தார் என்றும் கூறுகிறது. கேள்வி கிமு 6ல் அல்லது 5ல் உள்ள போக்குவரத்து வசதிகளின்படி நேபாளத்திலி ருந்து இலகுவாக புத்தர் இருதடவைகள் வந்து போகதற்கு சந்தர்ப்பம் உண்டா? சித்தங்கேணியில் இருந்து யாழ்பாணம் போய்வர ஒரு முழுநாள் எடுத்தகாலம் எனது பெற்றோரின் 20ம் நூற்றாண்டு. இது இற்றைக்கு 26நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாத்தியமாக இருந்திருக்குமா?

கேள்வி இரண்டு

புத்தர் தாமிரபணிக்கும், இரண்டாம் தடவையாக நைனாதீவுக்கும் வந்தார் அவரால் ஏன் மக்களை பௌத்தர்களாகவோ சீடர்களாகவே மாற்றமுடியவில்லை. பலநூற்றாண்டுகளின் பின்வந்த சங்கமித்திரை மகிந்ததேரரே இதைச்செய்தார்கள் என்றால் இது எதை எமக்கு எடுத்துக்காட்டுகிறது?

இந்த இருகேள்விகளும் தரும் விடையானது புத்தர் இலங்கைக்கு வரவில்லை என்பதையே நிரூபிக்கிறது. ஆக இலங்கை புத்தரால் ஆசீர்பதிக்கப்பட்ட தேசம் எனக் புனிதத்துவக்கோட்பாடுகளை மையப்படுத்துவது முற்றிலும் தவறானது. இப்புனிதக் கோட்பாட்டை கொண்டவர்களாயின் கொல்லாமையைக் கோட்பாடாகக் கொண்ட புத்தரின் போதனைகளில் இருந்து விலத்தி கொலைகளை முன்னிறுத்தும் பௌத்த பெரும்பான்மை மேலாதிக்கவாதம் வெட்கித்தலைகுனியவேண்டியதே.

இதைத்தொடர்ந்து பார்வையின் கோணங்களில் தேவநம்பியதீசனுக்குப்பிற்காலம், தமிழ்மன்னர்கள் படையெடுப்பில் அனுராதபும், தெற்கத்தைய (கதிர்காமப்பகுதி) சந்திரிய தமிழ்வம்சம், எல்லாளன், துஸ்டகைமுணு போன்ற வரலாற்றுப் புள்ளிகளைச் காண்போம்.

Posted in கட்டுரை | பின்னூட்டமொன்றை இடுக